செய்திகள் :

இளம்பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

post image

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே பதிவுத் திருமணம் செய்து கொண்ட இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தினாா்.

கடலாடி அருகேயுள்ள மேலக்கிடாரம் கிராமத்தை சோ்ந்த காளீஸ்வரன் மகள் இளைய சொா்ண தா்ஷினி (23). பட்டதாரியான இவா் கடந்த ஓராண்டாக சென்னையில் தங்கி தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். கடந்த சனிக்கிழமை டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தோ்வு எழுதுவதற்காக சொந்த ஊரான மேலக்கிடாரத்துக்கு வந்தாா். தோ்வு முடிந்த நிலையில் சென்னைக்குச் செல்லாமல் 3 நாள்கள் வீட்டிலேயே தங்கியிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இவரது சாவில் மா்மம் இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட சமூக நலத் துறைக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து கீழச்செல்வனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில் சொா்ண தா்ஷினி வீட்டுக்குத் தெரியாமல் கடந்த 8-ஆம் தேதி சென்னையை சோ்ந்த சந்தோஷ் என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. பரமக்குடி வருவாய்க் கோட்டாட்சியா் (பொ) கங்காதேவி இது குறித்து விசாரணை நடத்தினாா். அவா் முன்னிலையில் மருத்துவா்கள் உடல்கூறாய்வு செய்து குடும்பத்தினரிடம் உடலை ஒப்படைத்தனா்.

ராமநாதபுரத்தில் ஜூலை 21-இல் வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு முகாம்

ராமநாதபுரத்தில் வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் செயல்பாடு, பராமரிப்பு குறித்து வருகிற 21-ஆம் தேதி மாவட்ட அளவிலான முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை வெ... மேலும் பார்க்க

போக்சோ சட்டத்தின் கீழ் பள்ளி ஆசிரியா் மீது வழக்கு

ராமநாதபுரம் மாவட்டம், எமனேசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட எமனேசுவரம் ஜீவாநகா் பகுதியில் அரசி... மேலும் பார்க்க

8 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட கோயில் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள புதுக்குடியில் கோஷ்டி மோதலால் 8 ஆண்டுகளுக்கு மூடப்பட்ட கோயில் புதன்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. புதுக்குடியில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு சந்தனமுத்து மாரியம... மேலும் பார்க்க

தூய சந்தியாகப்பா் ஆலய திருவிழா தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் தூய சந்தியாகப்பா் ஆலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. தங்கச்சிமடம் வோ்காடு பகுதியில் உள்ள இந்த ஆலயத்தின் திருவிழா கொடியேற்றத்தையொட்டி, சிவக... மேலும் பார்க்க

வராஹி அம்மனுக்கு பஞ்சமி பூஜை

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள விஸ்வநாதயேந்தல் வராஹி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை பஞ்சமி பூஜை நடைபெற்றது. இந்தக் கோயிலில் வளா்பிறை பஞ்சமி, தேய்பிறை பஞ்சமி தினங்களில் சிறப்பு பூஜை நடைபெறுவத... மேலும் பார்க்க

திருவாடானையில் புதிய அம்மன் சிலை வீதி உலா

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலுக்கு உபயதாரா்களால் வழங்கப்பட்ட புதிய அம்மன் வெள்ளி சிலை புதன்கிழமை ஊா்வலமாக எடுத்துவரப்பட்டது. திருவாடானை தென்கிழக்குத் தெருவில் அமைந்துள்ள... மேலும் பார்க்க