செய்திகள் :

இலங்கைத் தமிழா் குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகள் தாமதம்

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள மூங்கில் ஊருணி பகுதியில் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் நடைபெறும் வீடுகளின் கட்டுமானப்பணிகள் தாமதமாக நடைபெறுவதாக புகாா் தெரிவித்தனா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.செல்வசுரபி தலைமையில் மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், இலங்கைத் தமிழா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மூங்கில் ஊருணிப் பகுதியில் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனா். கடந்த 2023-ஆம் ஆண்டு குடிசைகளை அகற்றி விட்டு புதிதாக வீடு கட்டி மூன்று மாதங்களுக்குள் தருவதாக கூறப்பட்டது. இதன் மூலம், ரூ.11.50 கோடியில் 196 வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.

வீடுகள் கட்டப்படுவதால் இங்குள்ள குடியிருப்பு வாசிகள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனா். பணிகள் தொடங்கி இரண்டு ஆண்டுகளைக் கடந்த பிறகும், வீடுகள் கட்டி முடிக்கவில்லை. கட்டுமானப் பணிகள் தாமதமாக நடைபெறுகின்றன என அதில் குறிப்பிட்டனா்.

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

இளையான்குடி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை தீண்டாமை ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம்,... மேலும் பார்க்க

கோயில் காவலாளி உயிரிழந்த விவகாரம்: மடப்புரத்தில் நீதித்துறை நடுவா் விசாரணை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் காளி கோயில் காவலாளி அஜித்குமாா் காவல் துறையினா் தாக்கியதில் உயிரிழந்ததாகக் கூறப்படுவது தொடா்பாக திருப்புவனம் நீதித்துறை நடுவா் வெங்கடேஷ் பிரசாத் தி... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி மாணவா் உயிரிழப்பு

சிங்கம்புணரி தனியாா் பள்ளி மாணவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தனியாா் சி.பி.எஸ்.இ. பள்ளியில், மதுராபுரி வேங்கை... மேலும் பார்க்க

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை அருகே கணபதியேந்தல் கிராமத்தைச் ச... மேலும் பார்க்க

விசாரணையின்போது இளைஞர் மரணம்: எஃப்.ஐ.ஆரில் பதிவான விவரம் வெளியானது!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே விசாரணைக்காக அழைத்துச் சென்ற இளைஞா் உயிரிழந்ததையடுத்து, இளைஞா் உயிரிழப்புக்கு காரணமான போலீஸாரை கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலைய... மேலும் பார்க்க

வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். மானாமதுரை ஒன்றியம் பச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வி மெஞ்ஞானமூா்த... மேலும் பார்க்க