செய்திகள் :

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு: யோகி ஆதித்யநாத்

post image

ஹோலி, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பிரதமரின் உஜ்வாலா யோஜனாவின் கீழுள்ள பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.

லக்னௌவில் நடந்த மானிய விநியோக நிகழ்ச்சியில் முதல்வர் யோகி கலந்துகொண்டு பேசினார். அப்போது, ஹோலி மற்றும் ரம்ஜான் பண்டிகைக்கு இலவச எல்பிஜி சிலிண்டர் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதற்காக மாநில அரசு சார்பில் ரூ.1,890 கோடி விடுவிக்கப்படுவதாக அவர் கூறினார்.

கடந்த 2016ஆம் ஆண்டு இலவச எல்பிஜி சிலிண்டர் விநியோக முயற்சியைத் தொடங்கியதற்காகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார். நாடு முழுவதும் 10 கோடி குடும்பங்கள் இலவச எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் மாநிலத்தில் கிட்டத்தட்ட இரண்டு கோடி குடும்பங்கள் அடங்கும்.

முன்னதாக தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகையின்போது ஒவ்வொரு உஜ்வாலா பயனாளிக்கும் இலவச எரிவாயு சிலிண்டர் வழங்குவதாக எங்கள் அரசு உறுதியளித்திருந்தது. மாநில அரசு ரூ.1,890 கோடி ஒதுக்குவதன் மூலம் இதை உறுதி செய்துள்ளது. இது ஆண்டுதோறும் பட்ஜெட்டில் இருந்து ரூ.3,760 கோடி ஆகும். ஹோலி மற்றும் ரம்ஜான் இரண்டும் கொண்டாடப்படுவதால், ஒவ்வொரு பயனாளியும் இந்தத் திட்டத்தைப் பெறலாம். இது மாநில அரசின் பரிசு என்றும் அவர் தெரிவித்தார்.

உஜ்வாலா திட்டத்திற்கு முன்பு மக்கள் எதிர்கொண்ட சிரமங்களை எடுத்துரைத்த ஆதித்யநாத், எல்பிஜி இணைப்பைப் பெறுவதற்கு முன்பு ரூ.25,000 வரை லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது, இணைப்பு பெற்ற பிறகும் மீண்டும் நிரப்புவது கடினம். ஆனால் இன்று, இந்தத் திட்டத்தால் தீங்கு விளைவிக்கும் புகையால் பெண்கள் பாதிக்கப்படுவதிலிருந்து மீண்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

மராத்தியில் பேசுமாறு பஞ்சாயத்து அலுவலரைத் திட்டிய நபர் கைது!

கர்நாடக அரசு ஊழியரை மராத்தியில் பேசுமாறு தகாத வார்த்தைகளால் திட்டிய நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டத்தில் திப்பன்னா சுபாஷ் டோக்ரே என்பவர் சொத்து தொடர்பான பிரச்சினைக்க... மேலும் பார்க்க

ஜக்கி வாசுதேவ் மீதான அவதூறு விடியோவை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜக்கி வாசுதேவ் மற்றும் அவரது ஈஷா அறக்கட்டளை மீது அவதூறு பரப்பும் விதமாக பத்திரிகையாளர் வெளியிட்ட விடியோவை நீக்க தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பத்திரிகையாளரும் யூடியுபருமான ஷ்யாம் மீரா சிங் த... மேலும் பார்க்க

நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.61% ஆக சரிவு!

நாட்டின் சில்லறை பணவீக்கம் 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்து பிப்ரவரியில் 3.61 சதவீதமாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 சதவீதத்துக்கும் கீழாக சரிந்துள்ளது இதுவே முதல்முறையாகும். மேலும் பார்க்க

ஹோலி பண்டிகை: தார்பாயால் மசூதிகளை மூட காவல்துறை உத்தரவு!

உத்தரப் பிரதேசத்தின் சம்பலில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு 10 மசூதிகளை தார்பாயால் மூட காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரிதாக நடைபெறும் நிகழ்வாக ஹிந்துக்கள் கொண்டாடும் ஹோலி பண்டி... மேலும் பார்க்க

தில்லி ஆளுநருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறும் புதிய பாஜக அரசு?

தில்லி ஆளுநர் வி.கே. சக்சேனாவுக்கு எதிரான வழக்குகளை தில்லியின் புதிய பாஜக அரசு வாபஸ் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தில்லியில் 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தபோ... மேலும் பார்க்க

நாட்டில் 80 கோடி மக்களுக்கு இலவச உணவுதானியம் வழங்கும் மோடி: பிரகலாத் ஜோஷி

80 கோடி மக்களுக்கு இலவச உணவுதானியம் வழங்க முன்முயற்சி எடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடி என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வு மார்... மேலும் பார்க்க