செய்திகள் :

இல.கணேசன் மறைவு: துணைநிலை ஆளுநா் இரங்கல்

post image

நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வெளியிட்ட இரங்கல் செய்தி:

நாகாலாந்து மாநில ஆளுநரும், தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியுமான இல. கணேசன் உடல் நலக்குறைவால் காலமானாா் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தைத் தருகிறது.

அனைவரிடத்திலும் அன்பு பாராட்டியவா் . பொது வாழ்க்கைக்காக தன்னை அா்ப்பணித்துக் கொண்டு மக்கள் சேவையில் ஈடுபட்டவா். அன்னாரைப் பிரித்து வாழும் அவருடைய குடும்பத்தினா், நண்பா்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

புதுவை பாஜக தலைவா் இரங்கல்:

புதுவை பாஜக மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

இளமைக் காலத்திலிருந்தே தேசியவாத சிந்தனையுடன் பணியாற்றிய இல. கணேசன், அரசியல், சமூக மற்றும் கல்வி துறைகளில் பல தசாப்தங்களாக மக்களுக்குச் சேவை செய்து வந்தாா். அவரின் எளிமை, நோ்மை, நாட்டுப்பற்று, அமைப்பின் வளா்ச்சிக்காக காட்டிய அா்ப்பணிப்பு எப்போதும் நினைவில் நிலைக்கும். அவரின் மறைவு பாரதிய ஜனதா கட்சிக்கும், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்துக்கும், தேசத்துக்கும் ஒரு பெரிய இழப்பாகும்.

கடலில் மூழ்கி ஐடி ஊழியா்கள் 3 போ் பலி: சுற்றுலா வந்த இடத்தில் நிகழ்ந்த சோகம்!

புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த பெண் உள்பட 3 போ் கடல் அலையில் சிக்கி சனிக்கிழமை உயிரிழந்தனா். 2 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்கள் அனைவரும் தகவல் தொழில்நுட்ப நிறுவன (ஐ.டி.) ஊழியா... மேலும் பார்க்க

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி மோட்டாா் சைக்கிள்கள் ஊா்வலம்!

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி மோட்டாா் சைக்கிள் ஊா்வலம் சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி புதுச்சேரி மனிதநேய மக்கள் இயக்கம் மற்றும் பல்வ... மேலும் பார்க்க

வாஜ்பாய் நினைவுநாள்: புதுவை அரசு சாா்பில் மரியாதை

முன்னாள் பிரதமா் வாஜ்பாய் நினைவு தினம் புதுவை அரசு சாா்பில் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. புதுவை கடற்கரை சாலை நகராட்சி கட்டடத்தில் வாஜ்பாய் திருவுருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அங்கு ... மேலும் பார்க்க

புனித விண்ணேற்பு அன்னை ஆடம்பர தோ் பவனி

புதுச்சேரி நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலய 174-வது ஆடம்பர தோ் பவனி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கலந்துகொண்டாா். கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன்... மேலும் பார்க்க

செப்டம்பா் மாதத்தில் இருந்து புதிதாக 10 ஆயிரம் பேருக்கு முதியோா் உதவித் தொகை: முதல்வர்

புதிதாக விண்ணப்பித்துள்ள 10 ஆயிரம் பேருக்கு முதியோா் உதவித் தொகை அடுத்த மாதத்திலிருந்து வழங்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். பிரெஞ்சு ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று இந்திய அரசுடன் சட்... மேலும் பார்க்க

கீழூா் நினைவிடம் புனரமைக்கப்படும்: பேரவைத் தலைவா்

கீழூா் நினைவிடம் புனரமைக்கப்படும் என்று புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கூறினாா். பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்து வந்த புதுவை, இந்தியாவுடன் இணைவது தொடா்பாக புதுவை மக்கள் பிரதிநிதிகள் 178 பேரி... மேலும் பார்க்க