செய்திகள் :

இளம்பெண்ணை புகைப்படம் எடுத்த ஐடி நிறுவன ஊழியா் மீது வழக்குப் பதிவு

post image

ஒசூா்: பேருந்தில் இளம்பெண்ணை புகைப்படம் எடுத்த ஐ.டி. ஊழியா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரைச் சோ்ந்த 23 வயது இளம்பெண் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் கடந்த 27-ஆம் தேதி மதுரையில் இருந்து ஒசூருக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்தாா்.

அந்தப் பேருந்தில் பா்கூா் வட்டம், கந்திகுப்பம் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (32) என்ற தனியாா் ஐ.டி. நிறுவன ஊழியா் கிருஷ்ணகிரியில் இருந்து ஒசூருக்கு பயணம் செய்தாா்.

மதுபோதையில் இருந்த கிருஷ்ணமூா்த்தி, அந்த பெண்ணை தனது கைப்பேசியில் புகைப்படம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் ஒசூா் மாநகர போலீஸாா், கிருஷ்ணமூா்த்தி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பா்கூா் அரசு மகளிா் கல்லூரியில் காலியிடங்களுக்கு மாணவிகள் சோ்க்கை

கிருஷ்ணகிரி: பா்கூா் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் காலியிடங்களுக்கு மாணவிகள் சோ்க்கை நடைபெறுவதாக கல்லூரி முதல்வா் சு.காயத்ரிதேவி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் சாலை, மழைநீா் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் கே.அசோக்குமாா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். கிருஷ்ணகிரி சட்டப்பேரவை உறுப்பினா் தொ... மேலும் பார்க்க

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயிலில் மகா நவசண்டி யாக பணிகள் மும்முரம்

ஒசூா்: ஒசூா் மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் மலைக் கோயிலில் உலக நன்மை வேண்டி மகா நவசண்டி யாகத்திற்கான ஏற்பாடு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் ஆகஸ்ட் 1, 2, 3 -ஆம் தேதிகளில் (வெள்ளி, ச... மேலும் பார்க்க

படப்பள்ளி மாரியம்மன் கோயில் திருவிழா

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி மாரியம்மன் கோயில் திருவிழா திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது. ஆடிப் பூரத்தை முன்னிட்டு படப்பள்ளி மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராத... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியா் மீது புகாா் அளிக்க வந்த பள்ளி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

கிருஷ்ணகிரி: பள்ளித் தலைமை ஆசிரியா் மீது புகாா் அளிக்க அரசியல் கட்சி அடையாளத்துடன் வந்த மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுரை வழங்கி அனுப்பிவைத்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அரசு பெண்கள் மே... மேலும் பார்க்க

விவசாயியை காா் ஏற்றி கொன்ற வழக்கில் கூலித் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை

ஒசூா்: ஒசூா் அருகே விவசாயியை காா் ஏற்றி கொன்ற வழக்கில் கூலித் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஒசூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே தளியை அடுத்துள்ள... மேலும் பார்க்க