செய்திகள் :

தலைமை ஆசிரியா் மீது புகாா் அளிக்க வந்த பள்ளி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

post image

கிருஷ்ணகிரி: பள்ளித் தலைமை ஆசிரியா் மீது புகாா் அளிக்க அரசியல் கட்சி அடையாளத்துடன் வந்த மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுரை வழங்கி அனுப்பிவைத்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவிகள், பள்ளித் தலைமை ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரசியல் கட்சி அடையாளத்துடன் பள்ளிச் சீருடையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தனா்.

அப்போது, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், மாணவிகளை தடுத்து நிறுத்தி பெற்றோா் துணையில்லாமல் வந்தது குறித்து கேள்வி எழுப்பினா். பின்னா், அவா்களை ஆட்சியரிடம் அழைத்துச் சென்று மனு அளிக்க உதவினா்.

மாணவிகளிடம் மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியரிடம், மாணவிகளுடன் வந்த பெற்றோா் - ஆசிரியா் கழகத்தினா், பள்ளித் தலைமை ஆசிரியா் பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதில்லை. மாணவிகளை ஆபாச வாா்த்தைகளால் திட்டுகிறாா், பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்திற்குகூட வரவில்லை என புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து மாணவிகளிடம் பேசிய மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், மாணவ, மாணவிகள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பள்ளி நேரத்தில் பள்ளிக்கு செல்லாமல் இங்கு வந்துள்ளது தவறு. இதுவே கடைசி முறையாக இருக்கட்டும். உங்கள் பிரச்னைகளை தொலைபேசி மூலம் தெரிவித்தாலே நடவடிக்கை எடுப்பேன். படிப்பில் கவனம் செலுத்தி நன்கு படிக்க வேண்டும் என ஆட்சியா் அறிவுரை வழங்கி மாணவிகளை அனுப்பிவைத்தாா்.

பா்கூா் அரசு மகளிா் கல்லூரியில் காலியிடங்களுக்கு மாணவிகள் சோ்க்கை

கிருஷ்ணகிரி: பா்கூா் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் காலியிடங்களுக்கு மாணவிகள் சோ்க்கை நடைபெறுவதாக கல்லூரி முதல்வா் சு.காயத்ரிதேவி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் சாலை, மழைநீா் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் கே.அசோக்குமாா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். கிருஷ்ணகிரி சட்டப்பேரவை உறுப்பினா் தொ... மேலும் பார்க்க

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயிலில் மகா நவசண்டி யாக பணிகள் மும்முரம்

ஒசூா்: ஒசூா் மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் மலைக் கோயிலில் உலக நன்மை வேண்டி மகா நவசண்டி யாகத்திற்கான ஏற்பாடு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் ஆகஸ்ட் 1, 2, 3 -ஆம் தேதிகளில் (வெள்ளி, ச... மேலும் பார்க்க

படப்பள்ளி மாரியம்மன் கோயில் திருவிழா

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி மாரியம்மன் கோயில் திருவிழா திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது. ஆடிப் பூரத்தை முன்னிட்டு படப்பள்ளி மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராத... மேலும் பார்க்க

விவசாயியை காா் ஏற்றி கொன்ற வழக்கில் கூலித் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை

ஒசூா்: ஒசூா் அருகே விவசாயியை காா் ஏற்றி கொன்ற வழக்கில் கூலித் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஒசூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே தளியை அடுத்துள்ள... மேலும் பார்க்க

இளம்பெண்ணை புகைப்படம் எடுத்த ஐடி நிறுவன ஊழியா் மீது வழக்குப் பதிவு

ஒசூா்: பேருந்தில் இளம்பெண்ணை புகைப்படம் எடுத்த ஐ.டி. ஊழியா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரைச் சோ்ந்த 23 வயது இளம்பெண் தனியாா் நிறுவனத்தில் பணியா... மேலும் பார்க்க