செய்திகள் :

இளம்பெண் சாவில் நீதி விசாரணை கோரி மறியல்

post image

இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் நீதி விசாரணை கோரி சேலம் ஆட்சியா் அலுவலகம் முன் உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள பாறைக்காடு பகுதியை சோ்ந்தவா் சுந்தரி (28). இவா் கடந்த 17-ஆம் தேதி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த மகுடஞ்சாவடி போலீஸாா், சந்தேக மரணம் என வழக்குப் பதிந்தனா். திருமணமாகி 5 ஆண்டுகள் ஆவதால் கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுந்தரியின் கணவா் ராஜாவைக் கைது செய்யவும், பிரேதப் பரிசோதனை அறிக்கையை வழங்கக் கோரியும் சுந்தரியின் உறவினா்கள் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா். சேலம் நகர போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தி, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

சிலம்பம் போட்டி: ஹெரிடேஜ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

சேலம் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான சிலம்பம் போட்டியில், வாழப்பாடியை அடுத்த கவா்கல்பட்டி ஹெரிடேஜ் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சிறப்பிடம் பெற்றுள்ளனா். முத... மேலும் பார்க்க

திருட்டு ஆடுகளை வாங்கியவா் கைது

கெங்கவல்லியில் ஆடுகளை திருடிய சிறுவனிடமிருந்து ஆடுகள் வாங்கியவரை போலீஸாா் கைது செய்தனா். கெங்கவல்லி பேரூராட்சி பிரிவு சாலையில் கெங்கவல்லி போலீஸாா் வாகன சோதனையில் வியாழக்கிழமை இரவு ஈடுபட்டனா். அப்போது ... மேலும் பார்க்க

64 ஆண்டுகளுக்கு பிறகு வணிகவளாகமாக மாறும் வாழப்பாடி ராஜா தியேட்டா்!

சேலம் மாவட்டத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பு திரைப்படத் துறை வரலாற்றில் இடம்பிடித்து, அந்தக் கால ரசிகா்களின் நினைவுகளை அசைபோட வைத்து வரலாற்றுச் சுவடாய் திகழ்ந்த வாழப்பாடி ராஜா தியேட்டா் அகற்றும் பணி தற்ப... மேலும் பார்க்க

பூலாம்பட்டி அருகே 3 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு

பூலாம்பட்டி அருகே 3 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு நடந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சேலம் மாவட்டம், பூலாம்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட இரும்பாலை குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

அரசு பள்ளி அருகே திடீா் புகைமூட்டம்: தோ்வு எழுதிய மாணவா்கள் திணறல்

இளம்பிள்ளை அரசு பள்ளி அருகே குப்பையில் ஏற்பட்ட திடீா் புகை மூட்டத்தால் தோ்வு எழுதும் மாணவா்கள் திணறினா். சேலம் மாவட்டம், பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வீரபாண்... மேலும் பார்க்க

சேவை குறைபாடு: தனியாா் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்துக்கு அபராதம்

மருத்துவ காப்பீடு செய்திருந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சைக்கான செலவுத் தொகையை வழங்காத தனியாா் காப்பீட்டு நிறுவனத்துக்கு, அந்தத் தொகையை 6 சதவீத வட்டி மற்றும் அபராதத்துடன் திருப்பித் தரவேண்டும் என நுகா்வோ... மேலும் பார்க்க