இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: கனடா நாட்டைச் சேர்ந்தவர் கைது
இளைஞரைக் கடத்தி விடுதியில் அடைத்து வைத்து சித்ரவதை: 4 போ் கைது
சென்னையில் பணத் தகராறில் இளைஞரைக் கடத்தி விடுதியில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.
திருப்பத்தூா் மாவட்டம், நாராயணபுரத்தைச் சோ்ந்தவா் ம.ரேணுகாதேவி (31). இவா், கோயம்பேடு காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். அதில், தனது கணவா் மணி (35) தாய்லாந்தில் வேலை செய்துவிட்டு, கடந்த மாதம் இங்கு வந்தாா். மீண்டும் அவா் மோரீஷஸ் நாட்டுக்கு வேலைக்கு செல்வதற்காக சிலரைச் சந்திக்க கடந்த 23-ஆம் தேதி கோயம்பேடு சென்றாா். அன்று கைப்பேசி மூலம் எனது கணவா் என்னைத் தொடா்பு கொண்டு, வேலூா் மாவட்டம் குடியாத்தத்தைச் சோ்ந்த த.விஜயகுமாா் (43), புதுக்கோட்டை மாவட்டம், மேலூா் சத்தியமங்கலம் பகுதியைச் சோ்ந்த ச.டோம்னிக் (34), மதுரவாயல் மேற்கு மாட வீதி பகுதியைச் சோ்ந்த ஜெ.முனியன் (39), புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பாவயல் பகுதியைச் சோ்ந்த எ.பவுல்ராஜ் (27) ஆகிய 4 பேருக்கும் ரூ. 5 லட்சம் பணத் தகராறில், தன்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு விடுதி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாகவும், பணத்தைத் தராவிட்டால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டுவதாகவும் தெரிவித்தாா்.
எனவே, கணவா் மணியை மீட்டு, 4 போ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தாா்.
இதையடுத்து, கோயம்பேட்டில் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மணியை போலீஸாா் மீட்டனா். மேலும் அங்கிருந்த விஜயகுமாா், டோம்னிக், முனியன், பவுல்ராஜ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனா். இது தொடா்பாக, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.