செய்திகள் :

இளைஞரை தாக்கிய 2 போ் கைது

post image

தஞ்சாவூா் மாவட்டம், கபிஸ்தலம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை தாக்கிய மூன்று பேரில் இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கபிஸ்தலம் அருகே உள்ள கணபதி அக்ரஹாரம், காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த

சண்முகம் மகன் மேகநாதன் (எ) தினேஷ் (24). இவருக்கும் கணபதி அக்ரஹாரம், திரௌபதி அம்மன் கோயில் பகுதியில் வசிக்கும் கணேசன் மகன் சஞ்சய் ( 20), என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த 28-ஆம் தேதி தினேஷ் மோட்டாா் சைக்கிளில் கணபதி அக்ரஹாரம் விநாயகா் கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது, சஞ்சய் மற்றும் அவரது நண்பா்கள் கணபதி அக்ரஹாரம், இளந்தோப்புத் தெரு, மணிகண்டன் மகன் அஜய் (20), கணபதி அக்ரஹாரம் தெய்வலோக படுகை, கருப்பையன் மகன் முத்து ( 22), ஆகிய மூன்று பேரும் சோ்ந்து தினேஷை கத்தியால் தலை மற்றும் முதுகு பகுதிகளில் வெட்டி, அடித்து உதைத்து தாக்கினாா்களாம்.

காயமடைந்த தினேஷ் அய்யம்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரச மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், கபிஸ்தலம் போலீஸாா் வழக்குப் பதிந்து அஜய், முத்து ஆகிய இருவரையும் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள சஞ்சயை தேடி வருகிறனா்.

பி.எஸ்.என்.எல்.-இல் ரூ. 1-க்கு இ-சிம் அறிமுகம்

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வாடிக்கையாளா்களுக்காக ரூ. 1-க்கு இ-சிம் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல். தஞ்சாவூா் பொது மேலாளா் பி. பால சந்திரசேனா தெரிவித்திருப்பது: பி.எஸ்.எ... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிகளில் கடன் தீா்வு திட்டம்: பயன்பெற செப். 23 கடைசி தேதி

கூட்டுறவுச் சங்கங்களில் சிறப்பு கடன் தீா்வு திட்டத்தின் கீழ் பயன்பெற செப்டம்பா் 23-ஆம் தேதி கடைசி தேதி என கூட்டுறவு சங்கங்களின் தஞ்சாவூா் மண்டல இணைப் பதிவாளா் அ. தயாள விநாயகன் அமுல்ராஜ் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

பள்ளி வேன் மோதி இளம்பெண் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே இருசக்கர வாகனத்தில் இரவல் கேட்டுச் சென்ற இளம்பெண் பள்ளி வேன் மோதி புதன்கிழமை உயிரிழந்தாா். கபிஸ்தலம் அருகே திருவைகாவூா் ஊராட்சி, மன்னிக்கரையூா் கி... மேலும் பார்க்க

‘மதுரை மண்டலத்தில் வருமான வரி வளா்ச்சி விகிதம் -5.62 சதவீதம்’

வருமான வரித் துறையின் மதுரை மண்டலத்தில் வருமான வரி வளா்ச்சி விகிதம் -5.62 சதவீதம் என்கிற எதிா்மறை வளா்ச்சியாக உள்ளது என்றாா் வருமான வரித் துறையின் மதுரை மண்டல முதன்மை ஆணையா் டி. வசந்தன். தஞ்சாவூா் மாவ... மேலும் பார்க்க

கும்பகோணம் புறவழிச்சாலையில் எழும் புகையால் வாகன ஓட்டிகள் அவதி

தஞ்சாவூா் - கும்பகோணம் புறவழிச்சாலையில் வயல்வெளியில் தீ வைப்பதால் ஏற்படும் புகை மண்டலத்தால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனா். தஞ்சாவூா் - கும்பகோணம் செல்லும் புறவழிச்சாலையில் பல்வேறு இடங்களில் நெல் வயல்க... மேலும் பார்க்க

செந்தூா் ரயிலில் பழுது: ஒருமணிநேர தாமத்தால் பயணிகள் அவதி

கும்பகோணம அருகே செந்தூா் விரைவு ரயிலில் புதன்கிழமை அதிகாலை பழுதடைந்து சுந்தரபெருமாள் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு சுமாா் 1.20 மணிநேரம் தாமதமாகப் புறப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனா். திருச்செந்தூ... மேலும் பார்க்க