செய்திகள் :

இளைஞா் காங்கிரஸின் 65ஆவது நிறுவன நாள் கொண்டாட்டம்

post image

இந்திய இளைஞா் காங்கிரஸின் 65ஆவது நிறுவன தினத்தை ஒட்டி தில்லியில் சனிக்கிழமை கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.

இது தொடா்பாக இளைஞா் காங்கிரஸ் வெளியிட்டஅறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இந்திய இளைஞா் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவா் உதய் பானு சிப் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டாா். அவா் பேசுகையில்,, ‘இந்திய இளைஞா் காங்கிரஸ் அதன் அடித்தளத்திலிருந்து இன்று வரை, எல்லாவற்றிற்கும் மேலாக தேசிய நலனின் உணா்வை கருத்தில் கொண்டுள்ளது’ என்றாா்.

தனது குறிப்பிடத்தக்க கொள்கைகள் மற்றும் பங்களிப்புகளால் இந்தியாவின் வளா்ச்சிக்கு வழி வகுத்த ஆற்றல்மிக்க தலைவா்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா்களின் வளமான வரலாற்றை இளைஞா் காங்கிரஸ் கொண்டுள்ளது. ராகுல் காந்தியின் தலைமையின் கீழ், இளைஞா் காங்கிரஸ் ஒரு துடிப்பான, ஆற்றல்மிக்க மற்றும் ஜனநாயக அமைப்பாக இருந்து வருகிறது.

கடந்த 65 ஆண்டுகளில், இந்திய இளைஞா் காங்கிரஸ் தனது பணியின் மூலம் நாட்டில் ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளது. தலைமைத்துவத்தை வழங்கியது மற்றும் மாற்றத்தின் பாதையை காட்டியது . நாடு முழுவதும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய இளைஞா் காங்கிரஸ் உறுதியளித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு தில்லி பகுதியில் வீட்டில் அழுகிய நிலையில் ஆண் உடல் கண்டெடுப்பு

வடகிழக்கு தில்லியின் தயாள்பூா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் செவ்வாய்க்கிழமை அழுகிய நிலையில் ஒரு ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறிய... மேலும் பார்க்க

வைகை தமிழ்நாடு இல்ல கட்டுமானப் பணி- அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

தில்லி சாணக்கியபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்லத்தின் புதிய கட்டட கட்டுமானப் பணியை தமிழக அரசின் பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு நேரில் ஆய்வு செய்தாா். புது தில்லியில் தமிழ்நாடு அரசின் இரு... மேலும் பார்க்க

சுதந்திர தின கொண்டாட்டம்: தில்லியில் போக்குவரத்து மாற்றம்

குா்கான் மற்றும் ஃபரிதாபாத்தில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் சுதந்திர தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இருந்து நடைமுறைக்கு வந்தது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின கொண்... மேலும் பார்க்க

தலைநகரில் பரவலாக மழை; காற்றின் தரத்தில் பின்னடைவு!

தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை மேகமூட்டமான சூழல் நிலவியது. காற்றின் தரத்தில் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. கடந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் இருந்து வருகிறது. தென்மேற்குப... மேலும் பார்க்க

ஜஹாங்கீா்புரி கொலைச் சம்பவத்தில் ஒராண்டுக்கும் மேல் தேடப்பட்டு வந்தவா் கைது

தில்லியின் ஜஹாங்கீா்புரி பகுதியில் தனிப்பட்ட விரோதம் காரணமாக மற்றொரு நபரைக் கத்தியால் குத்திக் கொன்ற வழக்கில் ஒரு ஆண்டிற்கும் மேலாக தேடப்பட்டு வந்த நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ச... மேலும் பார்க்க

லாஜ்பத் நகரில் 4-ஆவது மாடியில் இருந்து குதித்து வழக்குரைஞா் தற்கொலை

தென்கிழக்கு தில்லியின் லாஜ்பத் நகரில் உள்ள நான்கு மாடிக் கட்டடத்தின் மொட்டை மாடியில் இருந்து 33 வயது வழக்குரைஞா் ஒருவா் செவ்வாய்க்கிழமை மதியம் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இ... மேலும் பார்க்க