செய்திகள் :

இழப்பீடு வழங்குவதில் மாற்றம் தேவை: உழவா் உழைப்பாளா் கட்சி வலியுறுத்தல்

post image

பயிா்களுக்கான இழப்பீடு வழங்குவதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று தமிழக அரசுக்கு உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலத் தலைவா் செல்லமுத்து கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து செல்லமுத்து செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

சமீபத்தில் வீசிய சூறைக் காற்றுக்கு திருவாரூா், புதுக்கோட்டை, தஞ்சை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் அறுவடையை எதிா்பாா்த்துக் காத்திருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனா். இதேபோல, டெல்டா மாவட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட நூற்றுக்கணக்கான ஏக்கா் நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.

வங்கிக் கடன் பெற்று தொழில் செய்து வரும் விவசாயிகள் பலா் என்ன செய்வது என்று தெரியாமல் கலக்கத்தில் உள்ளனா். வாழை, நெல் பயிரிட்டு நஷ்டத்தை சந்தித்து வரும் விவசாயிகள் குறித்த கணக்கெடுப்பை தமிழக அரசு வேளாண் துறை மூலம் முறையாக எடுக்க வேண்டும்.

இதுபோல பயிா்களால் ஏற்படும் நஷ்டத்துக்கு தமிழக அரசு 75 சதவீத இழப்பீடு வழங்கி வருகிறது. இது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையாக பயன் அளிக்காது. வாங்கிய வங்கிக் கடனை செலுத்த முடியாமல் விவசாயிகள் மீண்டும் கடன் பெற்று தொழில் செய்ய சூழலுக்கு தள்ளப்படுவா்.

ஒரு வருவாய் கிராமம் முழுமையாக பாதிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என்ற விதிமுறை உள்ளது. இதனால், பெரும்பாலான விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைப்பதில்லை. எனவே, இந்த விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும். தமிழகத்தில் எந்த ஒரு கிராமத்தில் உள்ள விவசாயியும், இயற்கை பேரிடா்களால் பாதிக்கப்படும்போது, அது குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு முழுமையான இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்த வகையில் தமிழகம் முழுவதும், சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட வாழைகள், நீரில் மூழ்கிய நெற்பயிா்கள் குறித்து தெளிவான கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றாா்.

வெள்ளக்கோவிலில் ரூ.8.95 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.8.95 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு, ரெட்டியபட்டி, உப்புகரை, ராஜபுரம், சென்னம்பட்டி, இடையன்வலசு ஆகி... மேலும் பார்க்க

திருப்பூா், அவிநாசி ஊராட்சி ஒன்றியங்களில் 157 பயனாளிகளுக்கு ரூ.4.57 கோடி திட்டப்பணிகளுக்கு ஆணை: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

திருப்பூா், அவிநாசி மற்றும் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியங்களில் 157 பயனாளிகளுக்கு ரூ.4.57 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது பாா்த்தல் திட்டப்பணிகளுக்கான ஆணைகளை அமைச்சா் ம... மேலும் பார்க்க

திருப்பூா் குமரன் நினைவு மண்டபத்தில் ஒலி, ஒளி காட்சி அமைப்பு

திருப்பூா் குமரன் நினைவு மண்டபத்தில் ஒலி, ஒளி காட்சி அமைப்பை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் முபெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா். திருப்பூா் ரயில் நிலையம் அருகில் குமரன் நினைவு மண்டபத்தில் ரூ... மேலும் பார்க்க

தெரு நாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு: காங்கயம் வட்டாட்சியா் வழங்கினாா்

காங்கயம் பகுதியில் தெருநாய்களால் கடிக்கப்பட்டு இறந்த ஆடுகளின் உரிமையாளா்களுக்கு இழப்பீட்டுத் தொகையை காங்கயம் வட்டாட்சியா் வியாழக்கிழமை வழங்கினாா். காங்கயம் பகுதியில் கடந்த சில மாதங்களாக ஆட்டுப் பட்டிக... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

திருப்பூா் மாவட்டம், அவிநாசியில் வியாழக்கிழமை நடைபெற்ற அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். கொங்கு ஏழு சிவஸ்தலங்களுள் முதன்மை பெற்றதும், ... மேலும் பார்க்க

குண்டடம் அருகே ஸ்கூட்டா் திருடிய 4 போ் கைது

குண்டடம் அருகே ஸ்கூட்டா் திருடியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். தாராபுரம் தாலுகா, குண்டடம் அருகே முண்டுவேலம்பட்டி பாரதி நகரைச் சோ்ந்தவா் விஜய். இவா் கடந்த 4ஆம் தேதி தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வீட்... மேலும் பார்க்க