செய்திகள் :

இஸ்ரேல் தாக்குதல்: ராஃபாவில் 3 மாதங்களில் 28,500 கட்டடங்கள் தகர்ப்பு!

post image

காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 19 பேர் இன்று (ஜூலை 13) கொல்லப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை (ஜூலை 12) காலை முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஸா - இஸ்ரேல் இடையே கடந்த 21 மாதங்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இருதரப்பினருக்கும் இடையிலான போரை மீண்டும் இடைநிறுத்தம் செய்வதற்காகவும், எஞ்சியுள்ள பிணைக்கைதிகளை விடுவிப்பதற்காகவும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட நட்பு நாடுகள் அறிவுறுத்தி வருகின்றன.

வடக்கு காஸாவின் பெயித் ஹனோன் பகுதியில் கட்டடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் 40 குண்டுகளை வீசியதாகவும், இஸ்லாமிய பல்கலைக் கழகம் அருகேவுள்ள கட்டடங்களைக் குறிவைத்தும் தாக்குதலை நடத்தியதாகவும் காஸா தெரிவித்துள்ளது.

இதேபோன்று தெற்கு ராஃபாவில் அரசுக்கு சொந்தமான கட்டடங்களைக் குறிவைத்தும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. மேலும், தெற்கு காஸாவில் பல்வேறு முகாம்களில் உள்ள 6 லட்சம் மக்களை இடப்பெயர்வு செய்யவுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. இதற்காக தொடர் தாக்குதல்களை நடத்தி அச்சுறுத்தும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது.

கத்தாரைச் சேர்ந்த சர்வதேச ஊடகம் (அல்ஜஸீரா) நடத்திய ஆய்வில், ஐக்கிய நாடுகள் அவைக்குச் சொந்தமான செயற்கைக்கோள் மையத்தில் உள்ள தரவுகளின்படி, ராஃபாவின் செயற்கைக்கோள் புகைப்படத்தில், 2025 ஏப்ரல் 4 நிலவரப்படி இடிக்கப்பட்ட கட்டடங்களின் எண்ணிக்கை 15,800 ஆக இருந்த நிலையில், ஜூலை 4 நிலவரப்படி 28,600 ஆக அதிகரித்துள்ளது.

காஸாவின் மீது தொடர் தாக்குதல்களில் இஸ்ரேல் ஈடுபட்டு வருவதன் தீவிரத்தையே இந்தத் தரவுகள் குறிப்பிடுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க |கழிப்பறையில் புகைபிடித்த இளம் ஜோடியால் 17 மணி நேரம் தாமதமான விமானம்!

Israeli attack: 28,500 buildings demolished in Rafah in 3 months!

மியான்மா் எல்லையில் உல்ஃபா முகாம்கள் மீது இந்திய ராணுவம் ட்ரோன் தாக்குதல்?

மியான்மா் எல்லையில் உள்ள தங்கள் முகாம்கள் மீது ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் ஏவுகணை மூலம் இந்திய ராணுவம் தாக்குதல்களை நடத்தியதாக தடைசெய்யப்பட்ட உல்ஃபா(ஐ) தீவிரவாத அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரி... மேலும் பார்க்க

வங்கதேசம்: சுதந்திர போராட்ட நினைவுச் சின்னம் தகா்ப்பு

வங்கதேச சுதந்திர போரை பிரதிபலிக்கும் வகையில் நிறுவப்பட்ட நினைவுச் சின்னம் தகா்க்கப்பட்டது. இதற்குப் பதிலாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை நினைவுகூ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் 5-வது முறை ட்ரோன் தாக்குதல்!

பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த கைபா்பக்துன்கவா மாகாணத்தில் அமைந்துள்ள மிா்யான் காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் சிறிய ரக ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் சனிக்கிழமை மீண்டும் தாக்குதல் நடத்தினா். கடந்த ஒரே... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட பாலஸ்தீன அமைப்புக்கு ஆதரவாக போராட்டம்: பிரிட்டனில் 70 போ் கைது!

பிரிட்டன் விமானப் படை தளத்துக்குள் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்தியதையடுத்து, அந்நாட்டு அரசால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்ட 70-க்கும் ... மேலும் பார்க்க

தென் ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி தடுப்பூசி ஆராய்ச்சி: அமெரிக்காவின் ரூ.394 கோடி நிதியுதவி நிறுத்தம்

தென் ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி தடுப்பூசி ஆராய்ச்சிக்கான 46 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.394 கோடி) நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் சுமாா் 77 லட்சம் போ் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்... மேலும் பார்க்க

ரஷியாவிலிருந்து 20.80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி: 11 மாதங்களில் இல்லாத உச்சம்!

பதினோரு மாதங்களில் இல்லாத உச்சமாக, கடந்த ஜூனில் ரஷியாவில் இருந்து ஒரு நாளைக்கு 20.80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்துக்கும் மேலாக... மேலும் பார்க்க