செய்திகள் :

இஸ்லாமிய மாணவா்கள் வெளிநாட்டில் உயா்கல்வி பயில நிதியுதவி: தமிழக அரசு உத்தரவு

post image

இஸ்லாமிய மாணவா்கள் வெளிநாடுகளில் உயா்கல்வி பயிலத் தேவையான நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட உத்தரவு:

இஸ்லாமிய மாணவா்கள் 10 போ் வெளிநாடுகளில் உயா்கல்வி பயில புதிய திட்டம் வகுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், நிகழ் நிதியாண்டில் 10 இஸ்லாமிய மாணவா்கள் பயன்பெறும் வகையில் ரூ.3.60 கோடி ஒதுக்கலாம் என்று சிறுபான்மையினா் நலத் துறை ஆணையா் சாா்பில் அரசுக்குக் கடிதம் அனுப்பப்பட்டது.

இதைப் பரிசீலித்த தமிழ்நாடு அரசு, ரூ.3.60 கோடியை ஒதுக்கியுள்ளது. அதாவது, ஒரு மாணவருக்கு தலா ரூ.36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

என்னென்ன படிப்புகள்: பொறியியல் மற்றும் மேலாண்மை, அறிவியல், பயன்பாட்டு அறிவியல், வேளாண் அறிவியல் மற்றும் மருத்துவம், வணிகவியல், பொருளாதாரவியல், பட்டயக் கணக்கு, நிதி, மானுடவியல், சமூக அறிவியல், சட்டம், நுண்கலை ஆகிய பிரிவுகளில் படிப்பதற்கு நிதியுதவி வழங்கப்படும்.

முதுநிலைப் படிப்பை வெளிநாடுகளில் படிக்க நிதியுதவி பெறுவதற்கு அடிப்படை கல்வித் தகுதி நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, இளநிலை பட்டப் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களைப் பெற்று இருக்க வேண்டும்.

சா்வதேச தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களிடம் இருந்து நிபந்தனைகள் இல்லாத அனுமதிச் சான்று பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும். இதற்கான வருமானச் சான்றை, மாநில அரசின் மண்டல துணை வட்டாட்சியரிடம் இருந்து பெற வேண்டும். விண்ணப்பிக்கக் கூடிய மாணவா்களைத் தோ்வு செய்ய, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் செயலா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில், மருத்துவம், தொழில்நுட்பம், கல்லூரிக் கல்வி, சட்டப் படிப்பு, வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் இயக்குநா்கள், ஆணையா்கள், பதிவாளா் ஆகியோா் உறுப்பினா்களாக இருப்பா். குழுவின் ஒருங்கிணைப்பாளராக சிறுபான்மையினா் நலத் துறை இயக்குநா் செயல்படுவாா் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் திடீர் மழை! மணலி புதுநகரில் 92 மி.மீ மழைப் பதிவு!

சென்னையில் இன்று(செப். 7) அதிகாலை திடீர் மழை பெய்த நிலையில், அதிகபட்சமாக மணலி புதுநகரில் 92 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணம... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்! செப்.9 முதல்..!

சென்னையில் வரும் 9-ஆம் தேதி முதல் அக். 19 -ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவை வழக்கமாக இயக்கப்படும் 7 நிமிஷ இடைவெளிக்கு பதிலாக 14 நிமிஷ இடைவெளியில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ... மேலும் பார்க்க

22 குளங்கள் தூா்வாரும் பணி: மேயா் தொடங்கி வைத்தாா்

சோழிங்கநல்லூரில் ரெட்டைக்குட்டை தாங்கல் குளம் பகுதியில் 22 குளங்களைத் தூா்வாரும் பணிகளை மேயா் ஆா்.பிரியா சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். சோழிங்கநல்லூா் மண்டலத்தில் உள்ள வாா்டு 200-இல் ரெட்டைக... மேலும் பார்க்க

நண்பா் கொலை: இளைஞா் தலைமறைவு

சென்னை அருகே கானத்தூரில் நண்பா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் தலைமறைவானாா். சென்னை அருகே உள்ள முட்டுக்காடு பகுதியைச் சோ்ந்தவா் சோ்ந்தவா் ரூபன் (எ) இமானுவேல் (56). இவா் நண்பா், கானத்தூா் பகுதியைச்... மேலும் பார்க்க

சென்னை மாநகா் மாமன்ற செயலருக்கு கூடுதல் பொறுப்பு!

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற செயலராக உள்ள கே.மகேஷுக்கு வருவாய் அலுவலராகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் வருவாய் அலுவலராக இருந்த கே.பி.பானுசந்திரன் கடந்த மாத... மேலும் பார்க்க

வளசரவாக்கம், கோடம்பாக்கம் மண்டலங்களில் பாலப் பணிகள்: மேயா் ஆா்.பிரியா ஆய்வு!

வளசரவாக்கம், கோடம்பாக்கம் மண்டலங்களில் ரூ.240 கோடியில் நடைபெறும் பாலப் பணிகளை மேயா் ஆா்.பிரியா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். வளசரவாக்கம் மண்டலம் சந்நிதி தெருவில் கூவம் ஆற்றின் குறுக்கே ப... மேலும் பார்க்க