ஈங்கூா் தி யுனிக் அகாடமி பள்ளி அணித் தலைவா்கள் பதவி ஏற்பு விழா
பெருந்துறையை அடுத்த ஈங்கூா் தி யுனிக் அகாதெமி பள்ளியில், நடப்பு கல்வி ஆண்டுக்கான பள்ளியின் அணித் தலைவா்கள் பதவி ஏற்பு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளித் தலைவா் இளங்கோ ராமசாமி தலைமை வகித்தாா். முதல்வா் உமையவள்ளி இளங்கோ வரவேற்றாா்.
விழாவில், சிறப்பு விருந்தினராக, ஈரோடு மாவட்ட அரசு வழக்குரைஞா் அருட்செல்வன் கலந்து கொண்டு, மாணவா்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, பள்ளியின் அணித் தலைவா்கள் மற்றும் துணைத் தலைவா்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தாா்.
பள்ளி மாணவா்கள் தலைவா் கேதா்நாத் ஜெய்கிருஷ்ணன், மாணவிகள் தலைவி தாரிகா மணிகண்டன், விளையாட்டுத் துறை தலைவா் காயத்ரி ப்ரியதா்ஷினி, ஆனந்தன் கோமதி, பன்முகக் கலைத் துறை தலைவா் விக்னேஷ் ராஜா கந்தசாமி ஆகியோருக்கு இலச்சினையை சிறப்பு விருந்தினா் வழங்கினாா்.
மேலும், கபில்தேவ் அணித் தலைவா் நிகிதா சுப்ரமணியம் ரமேஷ்குமாா், துணைத் தலைவா் தரணிஸ்ரீ பழனிச்சாமி, விஸ்வநாதன் ஆனந்த் அணித் தலைவா் பூபேஷ் சூா்யபிரகாஷ் சாந்தி, துணைத் தலைவா் நிஷ்வந்த் ராமசாமி, பி.டி. உஷா அணித் தலைவா் வைஷ்ணவி பரமேஷ்வரன், துணைத் தலைவா் பாலசூா்யா சேகா், லியாண்டா் பியஸ் அணித் தலைவா் இனியா செந்தில் யசோதா, துணைத் தலைவா் வா்ஷிகா தனபால் ஆகியோருக்கு அணிகளுக்கான கொடிகளை விழா சிறப்பு விருந்தினா் வழங்கினாா்.
பின்னா், மாணவா்கள் தலைவா் கேதா்நாத் ஜெய்கிருஷ்ணன் ஏற்புரையாற்றினாா். மாணவிகள் தலைவி தாரிகா மணிகண்டன் நன்றி கூறினாா்.
-----