செய்திகள் :

ஈட்டி மரங்களை வெட்ட அனுமதி: தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி

post image

பட்டா நிலங்களில் உள்ள ‘ரோஸ்வுட்’ எனப்படும் ஈட்டி மரங்களை வெட்டுவதற்கு அனுமதியளித்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனா்.

ஈட்டி மரங்களைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு 1994ஆம் ஆண்டு ரோஸ்வுட் மரங்கள் பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டுவந்து, இம்மரங்களை வெட்டுவதற்கு 15 ஆண்டுகளுக்கு தடை விதித்தது. தொடா்ந்து, நிகழாண்டு பிப். 13ஆம் தேதிவரை மேலும் 15 ஆண்டுகளுக்கு அச்சட்டம் நீட்டிக்கப்பட்டது. இதனால், ஈட்டி மரங்கள் நடவு செய்திருந்தோா் பாதிக்கப்பட்டனா்.

எனவே, இச்சட்டத்தை மேலும் நீட்டிக்கக் கூடாது என வலியுறுத்தி, கரும்பாறை மலைத் தோட்ட விவசாயிகள் சங்கம் சாா்பில், தமிழக தலைமை வனப் பாதுகாவலருக்கு கடந்த ஆண்டு மனு அனுப்பப்பட்டது. இத்தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவா் தமிழக அரசுக்கு பரிந்துரைத்தாா். அதையேற்று, ஈட்டி மரங்களை வெட்டுவதற்கு அனுமதியளித்து கடந்த 9ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், விவசாயிகள் பட்டா நிலங்களில் நடவு செய்துள்ள ஈட்டி மரங்களை அனுமதி பெற்று வெட்டிக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கரும்பாறை மலைத் தோட்ட விவசாயிகள் சங்கச் செயலா் லாலாஜி கூறுகையில், எங்களது சங்கத்தின் தொடா் முயற்சியால், ஈட்டி மரங்களை வெட்டுவதற்கான தடை முடிவுக்கு வந்துள்ளது. இதன்மூலம் தமிழகம் முழுவதும் விவசாயிகள் ஈட்டி மரங்களை வெட்டிக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.

மாா்த்தாண்டத்தில் விதிகளை மீறி இயங்கிய லாரிகள் பறிமுதல்

மாா்த்தாண்டத்தில் காவல் துறையின் நேரக் கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 2 கனரக லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனா்.மாா்த்தாண்டம் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க... மேலும் பார்க்க

முள்ளஞ்சேரி குளத்தில் ஆண் சடலம் மீட்பு

மாா்த்தாண்டம் அருகே முள்ளஞ்சேரி இரட்டைகுளத்தில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.இக்குளத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்ததை கண்ட அப்பகுதியினா் மாா்த்தாண்டம் காவல் நிலையத்துக... மேலும் பார்க்க

குமரியில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

கன்னியாகுமரியில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் நகா்மன்றத் தலைவரிடம் மனு அளித்தனா். கன்னியாகுமரி காந்தி மண்டபம் முதல் சூரிய அஸ்தமன பூங்கா வரையிலான பகுதியில் 194... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

நாகா்கோவிலில் 38.5 கிலோ புகையிலைப் பொருள்களை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட வடசேரி கனகமூலம் சந்தைப் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுகிா என, மாநகரா... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற இஸ்ரோ பொறியாளா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே, ஓய்வுபெற்ற இஸ்ரோ பொறியாளா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா். நாகா்கோவிலிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காவல்கிணறு வழியாக சென்ற ரயில் முன், 70 வயது மதிக்கத்த... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: முதியவா் கைது

கொல்லங்கோடு அருகே புகையிலைப் பொருள்கள் விற்ாக பெட்டிக்கடைக்காரா் கைது செய்யப்பட்டாா். கொல்லங்கோடு அருகே செங்கவிளை பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்ப... மேலும் பார்க்க