செய்திகள் :

"ஈரானுக்கு உரிமை உண்டு" - ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம்

post image

நேற்று வரை, இஸ்ரேல் - ஈரான் தாக்குதலாக இருந்தது, இன்று முதல் அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் தாக்குதலாக மாறியுள்ளது.

ஈரானின் மூன்று அணு ஆயுத திட்டப் பகுதிகளை அமெரிக்க ராணுவம் தாக்கியுள்ளது. இதை அமெரிக்க அதிபர் ட்ரம்பே உறுதி செய்துள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனங்களைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...

"இஸ்ரேலின் தொடர் தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் அணு சக்தி மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனங்களைத் தெரிவிக்கிறது. அமெரிக்காவின் தாக்குதலால், பிராந்தியத்தில் பதற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளதைக் குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம்.

டொனால்ட் ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் சர்வதேச சட்டத்தின் அனைத்து விதிமுறைகளையும் மீறுவதாகும். ஐ.நா சாசனத்தின் கீழ், தங்களைத் தற்காத்துக் கொள்ள ஈரானுக்குச் சட்டப்பூர்வமான உரிமை உள்ளது என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

ஈரானுக்கு எதிராக எழுந்து வரும் பதற்றம் மற்றும் வன்முறை மிகவும் கவலையளிக்கிறது. இது அந்தப் பிராந்தியத்தையும், அதற்கு அப்பால் உள்ள இடங்களையும் பாதிக்கும்.

பொதுமக்களின் உயிர்கள், சொத்துகளை மதிக்க வேண்டிய அவசியத்தையும், இந்தத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

அனைத்து தரப்பினரும் சர்வதேச சட்டத்தைக் குறிப்பாக, சர்வதேச மனிதநேய சட்டத்தைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

ஐ.நா சாசனத்தின் படி, பேச்சுவார்த்தை நடத்துவது மட்டுமே இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கான ஒரே வழி".

பாகிஸ்தான் கொடி
பாகிஸ்தான் கொடி

நேற்று கூட, அமெரிக்க அதிபர் ட்ரம்பை அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்ய இருப்பதாக பாகிஸ்தான் கூறியிருந்தது. ஆனால், தற்போது ஈரான் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் அமெரிக்காவைக் கடுமையாகக் கண்டித்துள்ளது.

காரணம், பாகிஸ்தானும், ஈரானும் அண்டை நாடுகள். ஈரான் மீதான தாக்குதல் பாகிஸ்தானையும் பாதிக்க வாய்ப்புள்ளது என்பதுதான் பாகிஸ்தானின் இந்த நிலைப்பாட்டிற்குக் காரணம்.

பாகிஸ்தான் அறிக்கை
பாகிஸ்தான் அறிக்கை

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

ஆ.ராசா முன் அடுக்கப்பட்ட புகார்கள்; "திமுகவில் இது சாதாரணம்" - என்ன சொல்கிறார் பெரம்பூர் எம்எல்ஏ?

தேர்தல் நடைமுறைகள் தொடங்க இன்னும் சில மாதங்களே இருக்கும் சூழலில் அரசியல் கட்சிகள் அதற்கு ஆயத்தமாகும் வகையில் வேலைகளை இப்போதே தொடங்கி விட்டன.ஆளும் திமுகவில் மாவட்ட அளவில் கட்சியின் நடப்பு நிலவரத்தைக் க... மேலும் பார்க்க

Iran: "வலியுறுத்தினேன்..." - ஈரான் அதிபருடன் தொலைப்பேசியில் மோடி; என்ன பேசினார்?

ஒரு வாரக் காலத்திற்கும் மேலாக, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று அமெரிக்காவும் ஈரானின் அணு திட்டப் பகுதிகளைத் தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதல்களுக்கு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்புக... மேலும் பார்க்க

முருக பக்தர்கள் மாநாடு: "பவன் கல்யாண் கட்சித் தலைவராக வரவில்லை; முருக பக்தராக வருகிறார்" - கஸ்தூரி

மதுரையில் நடைபெறுவது அரசியல் விழா அல்ல, தமிழ்க்கடவுள் முருகனைப் போற்றும் மாநாடு என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.இன்று மதுரை வந்த நடிகை கஸ்தூரி செய்தியாளர்களிடம் பேசும்போது, "கும்பாபிஷேகம், முருகன... மேலும் பார்க்க

முருக பக்தர்கள் மாநாடு: 10,000 வாகனங்களில் 2.5 லட்சம் பேர்? மேடையில் முருகன் சிலைகள் - நேரடி விசிட்

மதுரை பாண்டி கோவில் அருகிலுள்ள அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முருக பக்தர்கள் மாநாடு இன்று நடைபெறவிருக்கிறது. இம்மாநாட்டுக்காக அறுபடை முருகன் கோவில்களைப் போன்ற செட் ஒன்று... மேலும் பார்க்க

கீழடி: "ஆதாரம் இல்லாத அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு ஏற்காது" - ஆர்.பி.உதயகுமார்

மதுரையில் நடந்த தனியார் நலத்திட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "திமுக ஆட்சியின் சக்கரம் சுழல்கிறதோ இல்லையோ, அரசு பேருந்தின்... மேலும் பார்க்க