செய்திகள் :

ஈரோடு கிழக்கு: திமுக வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலை

post image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில், முதல் சுற்று நிலவரத்தில், திமுக வேட்பாளர் சந்திரகுமார் 8,025 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 1.081 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இந்தத் தோ்தலில் திமுக சாா்பில் வி.சி.சந்திரகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் மா.கி.சீதாலட்சுமி உள்பட 46 போ் போட்டியிட்டனா். அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தோ்தலை புறக்கணித்தன. முதற்கட்ட நிலவரத்தில் திமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார். முதற்கட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான 251 தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசுப் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7.30 மணிக்கு தபால் வாக்கு இருப்பறை திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. தொடர்ந்து காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு இயந்திர இருப்பறை திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

தபால் வாக்குகள் முதலில் ஒரு மேஜையில் மட்டும் எண்ணப்பட்டன. காலை 8.30 மணிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. 17 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படவிருக்கின்றன. ஒரு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணி முடிக்க 20 முதல் 25 நிமிஷங்கள் வரை ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

என்.ஆர். காங்கிரஸ் தமிழ்நாட்டில் போட்டியிட்டால் படுதோல்வியை சந்திக்கும்: நாராயணசாமி

என்.ஆர். காங்கிரஸ் தமிழ்நாட்டில் போட்டியிட்டால் படுதோல்வியை சந்திக்கும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் வாழும் இந்தியர்களை அவமதித்த அமெரிக்காவைக் கண்டித்தும், அமெரிக்... மேலும் பார்க்க

இந்தியா கூட்டணிக் கட்சியினர் ஈகோவைக் கைவிட வேண்டும்: திருமாவளவன்

தில்லி தேர்தல் முடிவுகளைக் கருத்தில்கொண்டு இந்தியா கூட்டணிக் கட்சியினர் ஈகோவைக் கைவிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களுடன்... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு: 4 ஆண்டுகளில் 2-வது இடைத்தேர்தல்! வாக்களிக்காத 72 ஆயிரம் பேர்!!

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் ஈரோடு சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டு வருகின்றன.முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியின் ஏஜெண்டுகள் வாக்கு எண்ணும் மையத்தில் அ... மேலும் பார்க்க

இலங்கையிலிருந்து சென்னை வந்தவருக்கு குரங்கு அம்மை இல்லை: சுகாதாரத் துறை

இலங்கையில் இருந்து சென்னை வந்த நபருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருந்ததால், அவருக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு அத்தகைய பாதிப்பு இல்லை என்பத... மேலும் பார்க்க

மரம் வெட்டும் கருவியில் சிக்கி துண்டான கை: இளைஞருக்கு மறு சீரமைப்பு சிகிச்சை

மரம் வெட்டும் இயந்திரத்தில் சிக்கி இளைஞரின் கை மணிக்கட்டு துண்டிக்கப்பட்ட நிலையில், சிக்கலான மறு சீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் இளைஞருக்கு மறுவாழ்வு அளித்த... மேலும் பார்க்க