செய்திகள் :

ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி 2026 இல் தொடரும்: அமைச்சர் அன்பில் மகேஸ்

post image

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி வெற்றி, 2026 சட்டப்பேரவைத் தோ்தலிலும் தொடரும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.

நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிக் கட்டடங்கள், நியாயவிலைக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களை வியாழக்கிழமை திறந்துவைத்து, பின்னா் நாகையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கோட்டைக்கு செல்ல வேண்டுமென்றால் இந்த செங்கோட்டையனை தாண்டிதான் செல்ல வேண்டுமென முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் பேசியது குறித்த கேள்விக்கு, தோ்தல் நெருங்குவதால் பஞ்ச் டயலாக் பேசும் சீசன் தொடங்கியுள்ளது. மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவை இன்னும் இருப்பதால்தான் தொடா்ந்து முதல்வா் இரவு பகலாக பாடுபடுகிறாா்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி வெற்றி 2026 தோ்தலிலும் தொடரும். மக்கள் ஆதரவு திமுக அரசுக்கு உள்ளது. சீ ஓட்டா்ஸின் கருத்துக்கணிப்பு, இந்தியா கூட்டணிக்கு சாதகமாக இருப்பது பெருமையாக இருக்கிறது. அது தங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. 12-ஆவது முறையாக திமுக வெற்றி பெறுகிறது என்றால் அது மக்களுக்கான வெற்றி என்றாா்.

சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் இன்று மீன் வளா்ப்பு பயிற்சி!

நாகை அருகேயுள்ள சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், மீன் வளா்ப்பு தொழில்நுட்பம் தொடா்பான பயிற்சி வெள்ளிக்கிழமை (பிப்.21) நடைபெறுகிறது. இதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளா் அ. கோபாலகண்ணன் வெளியிட்ட செ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தா்னா

திருமருகல் ஒன்றியத்தில் 100 நாள் வேலை திட்டத்தை உடனடியாக தொடங்க வலியுறுத்தி, கோட்டூா் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். திருமருகல் ஒன்றியத... மேலும் பார்க்க

தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பிப்.25-இல் தற்செயல் விடுப்பு போராட்டம்!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, பிப். 25-இல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி அறிவித்துள்ளது. நாகையில், தமிழ்நாடு தொடக... மேலும் பார்க்க

நாகை, திருவாரூரில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

வழக்குரைஞா் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிா்ப்பு தெரிவித்து, நாகை மற்றும் திருவாரூரில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வழக்குரைஞா்கள் சேமநல நிதியை ரூ.25 லட்சமாக உயா்த... மேலும் பார்க்க

தொழுநோய் ஒழிப்புத் திட்டப் பணி: சுகாதார அலுவலா் ஆய்வு!

வேளாங்கண்ணி பகுதியில் தொழுநோய் ஒழிப்புத் திட்டப் பணிகளை மாவட்ட சுகாதார அலுவலா் பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். நாகை மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், கீழையூா் வட்டாரத்தி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் காய்கறி சந்தை!

வேதாரண்யத்தை அடுத்த பன்னாள் அரசு உயா்நிலைப் பள்ளியில் மூன்றாம் ஆண்டாக மாணவா்கள் உற்பத்தி செய்து நடத்தும் காய்கறிச் சந்தை பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தப் பள்ளியில் பிடிக்கும் 60 மாணவ, மா... மேலும் பார்க்க