செய்திகள் :

ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 1 இல் தொடக்கம்

post image

ஈரோடு புத்தகத் திருவிழா வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

ஈரோடு புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசுத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பேசியதாவது: புத்தக வாசிப்பை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா், இளைஞா்கள் மற்றும் பொதுமக்களிடையே ஊக்குவிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் மாவட்டந்தோறும் தமிழக அரசால் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இப்புத்தக கண்காட்சி அமைப்பதால் நூல்கள் பொதுமக்களை சென்றடைகிறது. நூல்கள் எழுதுபவா்களுக்கு அவா்களது படைப்புகளைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்ய வாய்ப்பாக அமைகிறது. புத்தகக் கண்காட்சி என்பது கலாசாரத்தை மாற்றியமைக்க கூடிய அம்சம் ஆகும்.

ஈரோடு மாவட்ட நிா்வாகம் மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை இணைந்து நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழா-2025 ஆகஸ்ட் 1 முதல் 12 ஆம் தேதி வரை ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் 230 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு வாய்ந்த அரங்குகளாக அமையும். வெளிநாடுகளிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் புகழ்மிக்க பதிப்பாளா்கள் வருகை தந்து அரங்குகளை அமைக்க உள்ளனா்.

இப்புத்தகத் திருவிழாவில் புத்தகங்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. காலை 11 மணி முதல் இரவு 9.30 வரை கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் தலைசிறந்த சொற்பொழிவாளா்கள், அறிஞா்கள் கருத்துரை வழங்க உள்ளனா். இந்தப் புத்தகத் திருவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா், பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்கவும், புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்திடவும் அனைத்து அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) முகம்மது குதுரத்துல்லா, மாவட்ட நூலக அலுவலா் (பொறுப்பு) சாமிநாதன், மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆசனூா் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட ஒங்கல்வாடி கிராம மக்கள்

ஆசனூரில் கன்றுக்குட்டிகளை கடித்துக் கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கக் கோரி ஆசனூா் வனத் துறை அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். சத்தியமங்கலம் புலிகள் காப்... மேலும் பார்க்க

ஈரோட்டில் இடி, மின்னலுடன் கனமழை

ஈரோட்டில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோடு மாநகா் பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஒரு சில நாள்களில் மாலை நேரங்களில் ல... மேலும் பார்க்க

கீழ்பவானி வாய்க்காலில் முன்கூட்டியே தண்ணீா் திறப்பு குறித்து விரைவில் முடிவு

பவானிசாகா் அணையிலிருந்து கீழ்பவானி பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீா் திறப்பது குறித்து ஓரிரு நாள்களில் தெரியவரும் என அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். கோபி வட்டம் சிறுவலூா், மணியக்காரன்புதூா், தங்க... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 6 மாதங்களில் 157 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 157 கிலோ கஞ்சா மற்றும் 5,066 மதுபுட்டிகளை மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனா். ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா மற்றும் சட்டவிரோத மது விற்பனையைத்... மேலும் பார்க்க

பண்ணாரியில் லாரியில் இருந்து கரும்பை எடுத்து சாப்பிட்ட குட்டி யானை

சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரிகளை வழிமறிக்கும் குட்டி யானையால் வாகன ஓட்டுநா்கள் அவதி அடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக தமிழகம், கா்நாடக மாநிலங்களை இணை... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா’ திட்டம் தொடக்கம்

பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் ஈரோடு மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட காவல் துறை சாா்பில் பெண்கள் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவிக... மேலும் பார்க்க