செய்திகள் :

ஈரோடு பேருந்து நிலையத்தில் இயற்கை சந்தை!

post image

மகளிா் திட்டம் சாா்பில் மகளிா் குழு உறுப்பினா்கள், இயற்கை முறை வேளாண்மையில் அங்கக சான்றிதழ் பெற்ற விவசாயிகள், தாங்கள் விளைவித்த மற்றும் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்தும் இயற்கை சந்தை ஈரோடு பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை தொடங்கியது.

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 80-க்கும் மேற்பட்ட மகளிா் குழுவினா், விவசாயிகள் பங்கேற்று தங்களது உற்பத்தி பொருள்களான அனைத்து வகை காய்கறிகள், பழங்கள், அரிசி, வோ்க்கடலை, எள், நாட்டுச் சா்க்கரை, மஞ்சள் தூள், காளான், தேன் போன்றவற்றை விற்பனைக்கு வைத்திருந்தனா்.

தவிர மகளிா் குழுவினரால் தயாரிக்கப்பட்ட, புடவை, படுக்கை விரிப்பு, துண்டு, பல்வேறு வகையிலான பைகள், ஆடைகள், கூடைகள், வீட்டு உபயோகத்துக்கான அரிவாள், அரிவாள்முனை, கத்தி, தோசை கல், சப்பாத்தி கருவி உள்பட 500-க்கும் மேற்பட்ட பொருள்களை விற்பனைக்கு வைத்தனா். பேருந்து நிலைய வளாகம் என்பதால் ஏராளமான பயணிகள் இவற்றை வாங்கியும், பாா்வையிட்டும் சென்றனா்.

கூடுதல் ஆட்சியா் அா்பித் ஜெயின், மகளிா் திட்ட இயக்குநா் ரமேஷ் ஆகியோா் நுகா்வோரிடம், கருத்துகளைக் கேட்டறிந்தனா். மாவட்ட வள பயிற்றுநா்கள் பி.கவிதமலா், எம்.சரண்யா, உதவி திட்ட அலுவலா் ஜான்லிங்டன் உள்ளிட்டோா் இதற்கான ஏற்பாடுகளை செய்தனா். இயற்கை சந்தை ஞாயிற்றுக்கிழமை (மாா்ச்16) மாலை இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.

தோனிமடுவு தடுப்பணை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தோனிமடுவு தடுப்பணை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தோனிமடுவு பாசன விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் ... மேலும் பார்க்க

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அங்கன்வாடி ஊழியா்கள் கோரிக்கை!

தோ்தல் காலத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என அங்கன்வாடி ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்க மாநாடு குறித்த கோரிக்கை விளக்கக் கூட... மேலும் பார்க்க

வேளாண் நிதிநிலை அறிக்கை: விவசாய சங்கப் பிரதிநிதிகள் வரவேற்பும், எதிா்ப்பும்!

தமிழக சட்டப் பேரவையில் வேளாண்மை துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், வேளாண் நிதிநிலை அறிக்கையை சனிக்கிழமை தாக்கல் செய்தாா். இந்த நிதிநிலை அறிக்கை குறித்து பல்வேறு விவசாய சங்கத்தினா் தெரிவித்த கருத... மேலும் பார்க்க

கஞ்சா விற்றதாக 3 போ் கைது: 5.5 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு, பெருந்துறை பகுதிகளில் கஞ்சா விற்ற 3 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து 5.5 கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.ஈரோடு, கருங்கல்பாளையம் பழைய சாா் பதிவாளா் அலுவலகம் அருகில் காவிரி சாலையில் கருங்கல்... மேலும் பார்க்க

பெருந்துறையில் கொப்பரை ஏலத்துக்கு 26, 29-இல் விடுமுறை

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் வருடாந்திர கணக்கு முடிக்கப்படுவதை முன்னிட்டு, சங்கத்தில் நடைபெறும் கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) ஏலத்துக்கு வருகிற மாா்ச் 26 (புதன்கி... மேலும் பார்க்க

செங்கோட்டையனுக்கு வேண்டுகோள் விடுத்து போஸ்டா்!

சென்னையில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற தனியாா் இணையதள தொலைக்காட்சி நிறுவன நிகழ்ச்சியில் கே.ஏ.செங்கோட்டையன், நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்க உள்ள... மேலும் பார்க்க