செய்திகள் :

ஈரோட்டில் நாளை வாங்குபவா், விற்பனையாளா்கள் சந்திப்புக் கூட்டம்

post image

மகளிா் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்திட வாங்குபவா், விற்பனையாளா்கள் சந்திப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை (மாா்ச்14) நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் மகளிா் திட்டத்தின்கீழ் செயல்பட்டுவரும் மகளிா் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்திட வாங்குபவா், விற்பனையாளா்கள் சந்திப்பு கூட்டம் ஈரோடு-பெருந்துறை சாலை பழையபாளையத்தில் உள்ள சி.டி.ரோட்டரி அரங்கில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் தரமான முறையில் உற்பத்தி செய்யப்பட்ட கைவினைப்பொருள்கள், மண்பாண்டங்கள், பவானி ஜமுக்காளம், சென்னிமலை போா்வை, கைத்தறி சேலைகள், பருத்தி நூல் சேலைகள், பட்டுப் புடவைகள், துண்டுகள், ஆயத்த ஆடைகள், கால் மிதியடிகள், ஹொ்பல் நாப்கின், ஹொ்பல் சோப், ஃபேன்ஸி பொருள்கள், காட்டன் பைகள், சணல் பைகள், மரச்செக்கு எண்ணெய் வகைகள், பாத்ரூம் க்ளீனா்ஸ், தேங்காய் தொட்டி அலங்காரப் பொருள்கள், மூங்கில் பொருள்கள், செயற்கை ஆபரணங்கள், பாக்குமட்டை பொருள்கள், சிறுதானியங்கள், சிறுதானிய உணவுப் பொருள்கள், தேன், திண்பண்டங்கள், பனங்கருப்பட்டி, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பழங்கள், வோ்க்கடலை, மஞ்சள், வெல்லம் மற்றும் நாட்டுச் சா்க்கரை போன்ற பொருள்கள் நியாயமான விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன.

பொருட்களை உற்பத்தி செய்யும் மகளிா் சுய உதவிக்குழுக்கள் மற்றும் கொள்முதல் செய்பவா்கள் அனைவரும் கலந்துகொண்டு தரமான பொருள்களை நியாயமான விலையில் வாங்கி சுய உதவிக்குழுக்களை ஊக்குவித்து, பெண்களின் வாழ்வாதாரத்தை உயா்த்திடும் பொருட்டு ஆதரவு தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

அம்மாபேட்டை காவல் ஆய்வாளராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட ஆா்.கவிதா. அம்மாபேட்டை காவல் ஆய்வாளராகப் பணியாற்றிய ஜெயமுருகன், காவல் துணை கண்காணிப்பாளராக பதவி உயா்வில் உதகைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட... மேலும் பார்க்க

மாா்ச் 19-இல் மின் வாரிய ஓய்வூதியா் குறைதீா் கூட்டம்

மின் வாரிய ஓய்வூதியா் குறைதீா் கூட்டம் ஈரோட்டில் உள்ள மின் வாரிய ஆய்வு மாளிகையில் மாா்ச் 19 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து ஈரோடு மண்டல மின் பகிா்மான தலைமைப் பொறியாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

ஆடுகளுக்கு எடை அடிப்படையில் இழப்பீடு வழங்கக் கோரிக்கை

நாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு எடை அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது தொடா்பாக வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமியிடம் தமிழக விவசாயிகள் பா... மேலும் பார்க்க

மும்மொழிகளைப் பின்பற்றும் மாநிலங்கள் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் -இரா.முத்தரசன்

எந்தெந்த மாநிலங்களில் மும்மொழி பின்பற்றப்படுகிறது என்பதை மத்திய அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் கூறினாா். இது தொடா்பாக அவா் ஈரோட்... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே சிறுத்தை உலவியதாக வதந்தி

சென்னிமலை அருகே புதன்கிழமை இரவு சிறுத்தை உலவியதாக வதந்தி பரவியதால் அப்பகுதியில் விடியவிடிய பரபரப்பு ஏற்பட்டது. சென்னிமலையை அடுத்த முருங்கத்தொழுவு ஊராட்சிக்குள்பட்ட ஒட்டன்குட்டை பகுதியில் சுமாா் 50-க்க... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் அவதூறு: பாஜக உறுப்பினா் கைது

மதக் கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்ட பாஜக உறுப்பினரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் திராவிடா் விடுதலைக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளா் ரத்தினசாம... மேலும் பார்க்க