செய்திகள் :

உக்ரைனுக்கு நேட்டோவில் இடமில்லை! டிரம்ப் அறிவிப்பு

post image

உக்ரைனுக்கு நேட்டோவில் இடமில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார்.

ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவின் அலஸ்காவில் டிரம்பை நேரில் சந்தித்து ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும் ஆனால், முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இரு தலைவர்களும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியை வெள்ளை மாளிகையில் திங்கள்கிழமை சந்திக்கும் டிரம்ப், போர் நிறுத்தம் தொடர்பாக பேசவுள்ளார்.

இந்த சந்திப்பில், ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் உக்ரைனுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதனிடையே, உக்ரைன் அதிபருடனான சந்திப்புக்கு முன்னதாக, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், நேட்டோவில் உக்ரைனால் இணைய முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்,

”உக்ரைன் அதிபர் நினைத்தால் ரஷியாவுடனான போரை உடனடியாக நிறுத்த முடியும். அல்லது தொடர்ந்து சண்டையிடலாம். எப்படி தொடங்கியது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஒபாமாவால் 12 ஆண்டுகளுக்கு முன்னதாக எவ்வித சண்டையும் இல்லாமல் ரஷியாவுக்கு அளிக்கப்பட்ட கிரிமியா திருப்பி அளிக்கப்படாது. நேட்டோவிலும் உக்ரைனால் இணைய முடியாது. சில விஷயங்கள் ஒருபோதும் மாறாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப்பின் இந்த பதிவால், உக்ரைன் அதிபருடனான சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ரஷியா தங்கள் நாட்டை ஆக்கிரமிக்கக் கூடும் எனத் தெரிவித்த ஸெலென்ஸ்கி, நேட்டோவில் இணைய முயற்சிகள் மேற்கொண்டார்.

நேட்டோவில் இணைந்தால் ரஷியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனத் தெரிவித்த புதின், உக்ரைன் மீது போர் தொடுத்தார். மூன்று ஆண்டுகளைக் கடந்த போர் தொடர்ந்து வருகிறது.

US President Donald Trump announced on Sunday that Ukraine has no place in NATO.

இதையும் படிக்க : குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஸ்டாலினிடம் ஆதரவு கோரினார் ராஜ்நாத் சிங்!

பாலியல் தொழிலுக்காகக் கடத்தல்! அமெரிக்காவில் 5 இந்தியர்கள் கைது!

பாலியல் தொழிலுக்காக சிறுமிகளை கடத்திய வழக்கில் 5 இந்தியர்களை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் மனித கடத்தலில் ஈடுபடும் கும்பலைக் குறிவைத்து கடந்த வாரம் மிக... மேலும் பார்க்க

ஆப்கனில் பேருந்து தீப்பிடித்தது: 71 பேர் உடல் கருகி பலி!

ஆப்கானிஸ்தானில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பேருந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 71 பேர் உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாகாண அரசு செய்தித் தொடர்பாளர் அஹ்மதுல்லா முத... மேலும் பார்க்க

ரஷியா - உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி விதிப்பு: வெள்ளை மாளிகை

ரஷியா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்துவதற்காகவே இந்தியா மீது கூடுதல் வரியை அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்ததாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும... மேலும் பார்க்க

புதிய போா் நிறுத்த திட்டம்: வெள்ளிக்கிழமை பதிலளிக்கிறது இஸ்ரேல்

காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்ளவும், அங்கு இன்னும் பிணைக் கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்கவும் மத்தியஸ்தா்களால் புதிதாக முன்வைக்கப்பட்டு, ஹமாஸ் படையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கனமழை: உயிரிழப்பு 706-ஆக உயா்வு

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதிகளில் ஜூன் 26 முதல் பெய்துவரும் அளவுக்கு அதிகமான மழை காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 706-ஆக உயா்ந்தது. இது குறித்து தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்பு கூறியத... மேலும் பார்க்க

புதின்-ஸெலென்ஸ்கி பேச்சுவாா்த்தை: ஏற்பாடுகளைத் தொடங்கினாா் டிரம்ப்

வாஷிங்டன், ஆக. 19: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷிய அதிபா் விளாதிமிா் புதினுக்கும், உக்ரைன் அதிபா் வோலோதிமிா் ஸெலென்ஸ்கிக்கும் இடையே நேரடி பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளதா... மேலும் பார்க்க