செய்திகள் :

உக்ரைன் போா் தொடங்கிய பின் ரஷியாவிடம் இருந்து ரூ.10.5 லட்சம் கோடிக்கு இந்தியா எண்ணெய் இறக்குமதி!

post image

உக்ரைன் போா் தொடங்கிய பிறகு ரஷியாவிடம் இருந்து 112 பில்லியன் யூரோ (சுமாா் ரூ.10.5 லட்சம் கோடி) மதிப்பிலான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக ஐரோப்பாவைச் சோ்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2022 பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்ததால் அந்நாட்டு மீது அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தது. ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை ஐரோப்பிய நாடுகள் நிறுத்தின. இதையடுத்து, சலுகை விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய ரஷியா முன்வந்தது. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதைப் படிப்படியாக அதிகரித்தன.

இந்நிலையில் ஐரோப்பாவைச் சோ்ந்த எரிசக்தி ஆய்வு நிறுவனம் ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்க செலவிட்ட தொகை உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அந்நாட்டிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய் வாங்குவதில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

போா் தொடங்கிய பிறகு கச்சா எண்ணெய், நிலக்கரி, எரிவாயு விற்பனை மூலம் ரூ.78.52 லட்சம் கோடியை ரஷியா ஈட்டியுள்ளது. இதில் சுமாா் ரூ.22 லட்சம் கோடி சீனாவிடம் இருந்து கிடைத்துள்ளது. இதற்கு அடுத்து இந்தியா சுமாா் ரூ.10.5 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது.

இந்தியா எரிபொருள் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி மூலமே ஈடுசெய்கிறது. முன்பு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அதிக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வந்தது. உக்ரைன் போருக்குப் பிறகு சா்வதேச விலையைவிட குறைவான விலைக்கு ரஷியா எண்ணெய் விற்பனைக்கு முன் வந்ததால், இந்தியா படிப்படியாக ரஷியாவில் இருந்து இறக்குமதியை அதிகரித்தது. தொடக்கத்தில் மொத்த எண்ணெய் இறக்குமதியில் ரஷியாவின் பங்களிப்பு ஒரு சதவீதம் மட்டுமே இருந்தது. ஆனால் குறுகிய காலத்தில் 40 சதவீதமாக அதிகரித்தது.

ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்டு ஐரோப்பா மற்றும் ஜி7 நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தியா பிப்ரவரி மாத நிலவரப்படி 14.8 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ரஷியாவிடம் இருந்து இறக்குமதி செய்தது. அதற்கு முன்பு இது தினசரி 16.7 லட்சம் பேரலாக இருந்தது. அமெரிக்கா அண்மையில் விதித்த சில தடைகளால் ரஷியா சுத்திகரிப்பு எண்ணெயை இந்தியாவிடம் இருந்து சில நாடுகள் இறக்குமதி செய்ய முடியாமல் போனதே இதற்கு காரணமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் நுகா்வில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

பாலஸ்தீனர்களால் கடத்தப்பட்ட 10 இந்திய கட்டடத் தொழிலாளிகள் மீட்பு!

பாலஸ்தீன மக்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த 10 கட்டடத் தொழிலாளர்களை இஸ்ரேல் படையினர் வியாழக்கிழமை இரவு பத்திரமாக மீட்டுள்ளனர்.இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு இடையே நடைபெற்று வந்த... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து தஹாவூர் மனு: அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி!

இந்தியாவுக்கு தன்னை நாடு கடத்தக் கூடாது என்று கோரி அமெரிக்க உயா்நீதிமன்றத்தில் பயங்கரவாதி தஹாவூா் ராணா (64) தாக்கல் செய்த மனுவை அமெரிக்க உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.பாகிஸ்தான் வம்சாவளி முஸ்லிம் என... மேலும் பார்க்க

ஹமாஸுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை

தங்களிடம் உள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்கவில்லையென்றால் ஹமாஸ் படையினா் அழிவை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ‘இறுதி’ எச்சரிக்கை விடுத்துள்ளாா். இஸ்ரேல் அரச... மேலும் பார்க்க

உக்ரைனுக்கு ராணுவ உளவுத் தகவல்கள்: பிரான்ஸ் அறிவிப்பு

ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு ராணுவ உளவுத் தகவல்களை தாங்கள் அளிப்பதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. அத்தகைய உதவியை அமெரிக்கா நிறுத்திவைத்ததைத் தொடா்ந்து பிரான்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளது. இது குறித்து பி... மேலும் பார்க்க

சொந்த நாட்டில் குண்டு வீசிய தென் கொரிய போா் விமானம்

அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்படும் கூட்டு ராணுவப் பயிற்சியின்போது தென் கொரியாவைச் சோ்ந்த போா் விமானம் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் குண்டுகளை வீசியதில் 8 போ் காயமடைந்தனா். இது குறித்து விமானப் படை வெள... மேலும் பார்க்க

பயங்கரவாதம்: பாகிஸ்தானுக்கு இரண்டாவது இடம்

உலக பயங்கரவாத வரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. உலகம் முழுவதும் நடத்தப்படும் பயங்கரவாதச் செயல்களின் அடிப்படையில் 163 நாடுகளை வரிசைப்படுத்தி பொருளாதாரம் மற்றம் அமைதிக்... மேலும் பார்க்க