செய்திகள் :

உக்ரைன் ராணுவப் பயிற்சித் திடலில் பாய்ந்த ரஷிய ஏவுகணைகள்! 3 வீரர்கள் பலி!

post image

உக்ரைனின் ராணுவப் பயிற்சித் திடலின் மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், அந்நாட்டின் 3 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.

உக்ரைனின் செர்னிஹிவ் பகுதியில் அமைந்திருந்த ராணுவப் பயிற்சி மையத்தின் திடலின் மீது ரஷியா நேற்று (ஜூலை 29), ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தியுள்ளது. இதில், உக்ரைனின் 3 ராணுவ வீரர்கள் பலியானதுடன், 18 பேர் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ரஷியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறுகையில், செர்னிஹிவ் மாகாணத்தின், ஹொன்சாரிவ்ஸ்கே பகுதியில் அமைந்திருந்த உக்ரைனின் 169-வது ராணுவப் பயிற்சி மையத்தின் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ளது.

இந்தத் தாக்குதல்களில், இஸ்காந்தர் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகவும், அதனால், சுமார் 200 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டிருக்கவோ அல்லது படுகாயமடைந்திருக்கவோ வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஷியா மக்கள் குடியிருப்புகள் அதிகமுள்ள பகுதிகளின் மீது தனது தாக்குதல்களை அதிகரித்துள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

மேலும், 78 ராணுவ ட்ரோன்கள், 8 அதி நவீன போர் விமானங்கள் ஆகியவை மூலம் உக்ரைன் நகரங்களின் மீது, நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில், 5 பேர் படுகாயமடைந்துள்ளதாக, உக்ரைனின் விமானப் படை தகவல் வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க: கூகுளின் ஏஐ சம்மரி: இணையதளங்களுக்கு சவால்! இனி என்னவாகும்?

Three Ukrainian soldiers have been killed in a Russian missile attack on a military training ground.

மருந்துகளின் விலைகளைக் குறைக்க 17 மருந்து நிறுவனங்களுக்கு டிரம்ப் அழுத்தம்!

உலக நாடுகளில் விற்பனையாகும் மருந்துகளின் விலைக்கு ஏற்ப, அமெரிக்காவிலும் மருந்துகளின் விலைகளைக் குறைக்குமாறு 17 மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழுத்தம் கொடுத்துள்ளார்... மேலும் பார்க்க

பயங்கர நிலநடுக்கம், சுனாமி! ஜப்பானின் புதிய பாபா வங்காவின் கணிப்பு நிஜமானது?

2025ஆம் ஆண்டில் ஜூலை 5ஆம் தேதி உலகமே பேரழிவை சந்திக்கப்போவதாக புதிய பாபா வங்கா கணித்திருந்த நிலையில், ஜூலை மாத இறுதியில் ரஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஜப்பானில் சுனாமி ஏற்பட்டது மக்களை ஆச்சரிய... மேலும் பார்க்க

இந்தியா உள்பட 69 நாடுகளுக்கு புதிய வரி: டிரம்ப் கையெழுத்து! யாருக்கு அதிகம்? குறைவு?

அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை கையெழுத்திட்டார்.இந்த உத்தரவு ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெ... மேலும் பார்க்க

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: கனடாவும் அறிவிப்பு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க திட்டமிட்டுள்ளதாக கனடா அறிவித்துள்ளது.ஏற்கெனவே, இஸ்ரேல், அமெரிக்காவின் எதிா்ப்பையும் மீறி பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்கப்போவதாக பிரான்ஸும், தங்களின் சில நிபந்தனை... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸ் அதிபா் ஆக.4-இல் இந்தியா வருகை

பிலிப்பின்ஸ் அதிபா் ஃபொ்டினண்ட் ஆா்.மாா்கோஸ் ஜூனியா், ஆகஸ்ட் 4 முதல் 8 வரை அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறாா்.இந்தப் பயணத்தின்போது குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை சந்திக்கும் அவா், பிரதமா் நரேந்... மேலும் பார்க்க

ஈரானுடன் வா்த்தகம்: 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

ஈரானுடன் வா்த்தகம் மேற்கொண்டுவரும் இந்தியாவைச் சோ்ந்த 6 நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதித்து அந் நாடு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.காஞ்சன் பாலிமா்ஸ், அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், ரா... மேலும் பார்க்க