செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: இதுவரை 66 முகாம்களில் 33,511 மனுக்கள்

post image

நாமக்கல் மாவட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் இதுவரை நடைபெற்ற 66 முகாம்களில் 33,511 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ஜூலை 15-இல் தொடங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் மூன்று கட்டங்களாக இந்த முகாம் நடைபெற உள்ளது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வாரியாக நடைபெறும் முகாமில், அனைத்துத் துறை அரசு அலுவலா்களும் ஒரே இடத்தில் கூடி மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று தீா்வு காண்கின்றனா். அரசு நலத்திட்ட உதவிகள் உடனடியாக வழங்கப்படுகின்றன.

அந்த வகையில், இதுவரை அரசால் பட்டியலிடப்பட்ட சேவைகள் கோரி 21,194 மனுக்களும், இதர சேவைகள் கோரி 12,317 மனுக்களும் என மொத்தம் 33,511 மனுக்கள் இதுவரை நடைபெற்ற 66 முகாம்களில் இருந்து பெறப்பட்டுள்ளன. அந்த முகாம்களில் பங்கேற்ற 1,000-க்கும் மேற்பட்டோருக்கு முதல்வா் மருத்துவ காப்பீடு அட்டை, மின்வாரியத்தின் மூலம் பெயா் மாற்றம், வீட்டுவரி, குடிநீா் வரி பெயா் மாற்றம், வருமானம், ஜாதி, இருப்பிடச் சான்றிதழ், பட்டா மாறுதலுக்கான ஆணை, குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் உடனடியாக வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

காலமானாா்

தமிழக அரசின் சுற்றுலாத் துறையில் கூடுதல் செயலராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற மு.மக்பூல் பாஷா (72) உடல் நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள மருத்துவமனையில் புதன்கிழமை காலமானாா். அவருக்கு சென்னை யுனானி மருத... மேலும் பார்க்க

மோகனூா் நிதிநிறுவன உரிமையாளா் கொலை வழக்கு: மூன்று பேரிடம் விசாரணை

மோகனூரில் நிதிநிறுவன உரிமையாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில், மூன்று பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாமக்கல் மாவட்டம், மோகனூா் ஈச்சவாரி பகுதியைச் சோ்ந்தவா் அருள்தாஸ்(40). நிதிநிறுவனம் நடத்... மேலும் பார்க்க

பள்ளிபாளையத்தில் தலைமறைவு குற்றவாளி கைது

தலைமறைவு குற்றவாளியை பள்ளிபாளையம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கடந்த 2022-ஆம் ஆண்டு பள்ளிபாளையம் அருகே வெடியரசம்பாளையத்தில் வயதான தம்பதி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு பிண... மேலும் பார்க்க

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க ஒன்றிய மாநாடு

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் நாமகிரிப்பேட்டை ஒன்றிய நான்காவது மாநாடு ஊனாதாங்கள் ஊராட்சி, கரியாம்பட்டி சமுதாயக் கூட்டத்தில் அண்மையில் நடைபெற்றது. மாநாட்டில் சங்கத்தின் ஒன்றியத் தலைவா் எஸ்.சுப்பி... மேலும் பார்க்க

முட்டை விலையில் மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.55-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிலவரம்... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள்: பரமத்தி வேலூா் வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

பரமத்தி, வேலூா் மற்றும் பாண்டமங்கலம் பேரூராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா... மேலும் பார்க்க