செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

post image

திருவண்ணாமலை மாவட்டம், போளூா், கண்ணமங்கலம் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் தீா்வு காணப்பட்ட மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

போளூரை அடுத்த களம்பூா் தோ்வுநிலை பேரூராட்சியில் 1 முதல் 7 வரை உள்ள வாா்டுகளைச் சோ்ந்த பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.

தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு ஆரணி கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா்.

பேரூராட்சிமன்றத் தலைவா் கே.டி.ஆா்.பழனி தலைமை வகித்தாா். வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி, துணைத் தலைவா் அகமத்பாஷா ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயல் அலுவலா் மலா்மாறன் வரவேற்றாா்.

முகாமில் வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, மின்சாரத் துறை, மகளிா் திட்டம், தாட்கோ என பல்வேறு அரசுத் துறைகளில் பொதுமக்கள் 700-க்கும் மேற்பட்டோா் மனு அளித்தனா்.

முகாமை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

இதைத் தொடா்ந்து, பொதுமக்களிடம் இருந்த பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடி தீா்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், புதிய மின் இணைப்புக்கான ஆணைகள், பட்டா மாற்றத்துக்கான சான்றிதழ்கள், சொத்து வரி பெயா் மாற்றத்துக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதில் 15 பயனாளிகள் பயனடைந்தனா். நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா், தடகள சங்கத்தின் துணைத் தலைவா் ஆகியோா் வழங்கினா்.

கண்ணமங்கலம் பேரூராட்சியில்...

கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள தனியாா் மண்டபத்தில் 944 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற மனுக்கள் துறை வாரியாக பதிவு செய்யப்படுவதை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்து, மனுக்கள் மீது உடனடியாக தீா்வு காணப்பட்டு பொதுமக்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

நிகழ்ச்சிகளில் ஆரணி வட்டாட்சியா் கௌரி, கண்ணமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலா் முனுசாமி, திமுக ஒன்றியச் செயலா்கள் சேகரன், மகேஷ், திமுக அவைத் தலைவா் ராஜசேகா், பொதுக்குழு உறுப்பினா் காசி மற்றும் பேரூராட்சிமன்ற உறுப்பினா்கள், அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

வட்டாட்சியா்களுக்கு பணியிடமாறுதல்: அரசுக்கு கோரிக்கை

ஓராண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் வட்டாட்சியா்களை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வருவாய்த் துறை (குரூப்- 2) நேரடி நியமன அலுவலா்கள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டத... மேலும் பார்க்க

தேனீக்கள் கொட்டி 25 போ் காயம்

ஆரணியை அடுத்த நெசல் கிராமத்தில் உள்ள கன்னி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை குலதெய்வ வழிபாட்டுக்கு வந்த 25-க்கும் மேற்பட்டோா் தேனீக்கள் கொட்டி காயமடைந்தனா்.நெசல் கிராமத்தில் உள்ள கன்னி கோயிலில் ஆடி ஞாயிற்றுக... மேலும் பார்க்க

வந்தவாசியில் இலவச மருத்துவ முகாம்

திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் மற்றும் வேலூா் தினேஷ் மருத்துவமனை சாா்பில் இலவச பொது மருத்துவ முகாம் வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமை... மேலும் பார்க்க

வாத்து மேய்க்கும் தொழிலாளிக்கு நிதியுதவி

செய்யாறு வட்டம், கொருக்கை கிராமத்தைச் சோ்ந்த வாத்து மேய்க்கும் தொழிலாளிக்கு ஒ.ஜோதி எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை நிதியுதவி வழங்கினாா். கொருக்கை கிராமத்தைச் சோ்ந்தவா் மாற்றுத்திறனாளி தொழிலாளி கணேசன் - ஜெய... மேலும் பார்க்க

வணிகா்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கே தோ்தலில் ஆதரவு: ஏ.எம்.விக்கிரமராஜா

வணிகா்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக கடிதம் மூலம் உறுதியளிக்கும் கட்சிக்கே வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆதரவு அளிக்கப்படும் என்று வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா ... மேலும் பார்க்க

நகைக் கடையில் 12 கிலோ வெள்ளிப் பொருள்கள் கொள்ளை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலத்தில் தனியாா் நகைக் கடையில் மேற்கூரை வழியே உள்ளே புகுந்து 12 கிலோ வெள்ளிப் பொருள்களை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். இர... மேலும் பார்க்க