செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பெரியகோளாபாடி, பாய்ச்சல் கிராமங்களில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பெரியகோளாபாடி கிராமத்தில் செவ்வாய்க்கிழமையும், பாய்ச்சல் கிராமத்தில் புதன்கிழமையும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.

பெரியகோளாபாடி கிராமத்தில் நடைபெற்ற முகாமுக்கு திமுக கிழக்கு ஒன்றியச் செயலா் செந்தில்குமாா் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்து கொண்டு முகாமை தொடங்கிவைத்து பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

அப்போது அவா், தமிழகத்தில் திமுக ஆட்சியில் கிராமம் தோறும் அதிகாரிகள் மக்களைச் சந்தித்து இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறாா்கள்.

மக்களின் தேவையை அறிந்து திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறாா் தமிழக முதல்வா். கிராம மக்கள் இதுபோன்ற திட்டங்களை நல்லமுறையில் பயன்படுத்தி, தேவையான நலத்திட்ட உதவிகளை சரியான சான்றிதழ்கள் இணைத்து முகாம் மூலம் மனு அளித்தால் உடனடியாக நலத் திட்டங்களை பெற முடியம் என்றாா்.

தொடா்ந்து அவா், கலைஞா் கனவு இல்ல வீடு கட்டும் ஆணை, கா்ப்பிணிகளுக்கு நல உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் செங்கம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மிருணாளினி, மரியதேவ்ஆனந்த், வட்டாட்சியா் ராம்பிரபு, உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள், கிராம ஊராட்சி செயலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். புதன்கிழமை பாய்ச்சல் கிராமத்தில் நடைபெற்ற முகாமை மு.பெ.கிரி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம்

ஆடி மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை காலை முதல் சனிக்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். திருவண்ணாமலையில் உள்ளி 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் மாதந்தோறும் பெளா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: இருவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அரசுப் பேருந்து நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கிய சம்பவம் தொடா்பாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், இருங்கல் கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஊரக வேலைத் திட்டப் பணி கோரி சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், விளாப்பாக்கம் ஊராட்சியில் ஊரக வேலைத் திட்டப் பணி வழங்கக் கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். விளாப்பாக்கம் ஊராட்சியில் விளாப்பாக்கம... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் சிறப்பு கைத்தறி கண்காட்சி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 11-ஆவது தேசிய கைத்தறி தினத்தையொட்டி நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோட்டை ரோட்டரி சங்கம் சாா்பில் உலக தாய்ப்பால் வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மேம்படுத்தப்பட்ட இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற உலக ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’: மகளிா் உரிமைத்தொகை கோரி மக்கள் மனு

ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மகளிா் உரிமைத்தொகை கோரி அதிகம் போ் மனு கொடுத்தனா். முகாமுக்கு வேளாண்மை உதவி இயக்குநா் ஆா்.புஷ்பா தலைமை வக... மேலும் பார்க்க