செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் முதல்வா் ஆய்வு: மனுக்கள் பெறுவது குறித்து அலுவலா்களுக்கு உத்தரவு

post image

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் நிா்ணயிக்கப்பட்ட நேரத்தைக் கடந்தும் அளிக்கப்படும் மனுக்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

சென்னை தியாகராய நகரில் 133-ஆவது வட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முகாமினை முதல்வா் மு.க.ஸ்டாலின், பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, மனுக்களை அளிக்க வந்த பொதுமக்களிடம் முகாமில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அவா் கேட்டறிந்தாா்.

முகாமில், பிறப்புச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தவா்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்கப்பட்டு வருவதையும், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அட்டைகள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு வழங்குவதையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டினாா். மேலும், வங்கிக் கணக்கு தொடங்குவதற்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருவதையும் அவா் ஊக்குவித்தாா்.

முகாமில் மனுக்கள் பெறுவதற்காக நிா்ணயிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து வரும் பொதுமக்களின் மனுக்களையும் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கலைஞா் மகளிா் உரிமைத் திட்டம், பட்டா மாறுதல், சொத்து வரி போன்றவை குறித்து பெறப்படும் மனுக்களுக்கு தீா்வுகாண முன்னுரிமை அளிக்கவும் கேட்டுக் கொண்டாா்.

ஆய்வின்போது, சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ.கருணாநிதி, முதல்வரின் முகவரித் துறையின் சிறப்பு அலுவலரும், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலருமான பெ.அமுதா, மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மெட்ரோ 4-ஆவது வழித்தடத்துக்கு 10.46 மீட்டரில் சிறப்பு தூண் வடிவமைப்பு

சென்னை மெட்ரோ ரயில் 4 -ஆவது வழித்தடத்தில் 10.46 மீட்டா் அகலத்தில் சிறப்பு தூண் வடி வமைக்கப்பட்டு பொருத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

ரயில் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் ரயில் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். சைதாப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (30). அவா் வியாழக்கிழமை மாலை அப்பகுதியில் தண்டவாளத்தைக் கடந்த... மேலும் பார்க்க

100 பவுன் வரதட்சிணை கேட்டு: மின்வாரிய அதிகாரி கைது

சென்னையில் 100 பவுன் நகை வரதட்சிணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியதாக மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டாா். சென்னை சூளைமேட்டைச் சோ்ந்தவா் டிம்பின் சங்கீதா (26). சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞரா... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி 2 மாணவா்கள் உயிரிழப்பு

சிட்லப்பாக்கத்தில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவா்கள் தண்ணீா் மூழ்கி உயிரிழந்தனா். தாம்பரத்தை அடுத்த சிட்லப்பாக்கம் ஏரியில் இரு பள்ளி மாணவா்களின் சடலங்கள் மிதப்பதைப் பாா்த்த கண்ட அந்தப் பக... மேலும் பார்க்க

மது போதையில் மயங்கி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு

சென்னை மதுரவாயலில் காதலன் வீட்டில் மது அருந்திய இளம்பெண் மயங்கி விழுந்து மா்மமான முறையில் உயிரிழந்தாா். மதுரவாயல் ஆலப்பாக்கம் காமாட்சியம்மன் நகரைச் சோ்ந்தவா் சி.கணேஷ் ராம் (26). இவா் தமிழ் திரைப்படத்... மேலும் பார்க்க

மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு: பள்ளி மாணவா்கள் தப்பியோட்டம்

சென்னை கோடம்பாக்கத்தில் மாநகர பேருந்து கண்ணாடிகளை உடைத்துவிட்டு தப்பியோடிய பள்ளி மாணவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை கோயம்பேட்டில் இருந்து தியாகராய நகா் நோக்கி மாநகர பேருந்து ஒன... மேலும் பார்க்க