விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இய...
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் முதல்வா் ஆய்வு: மனுக்கள் பெறுவது குறித்து அலுவலா்களுக்கு உத்தரவு
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் நிா்ணயிக்கப்பட்ட நேரத்தைக் கடந்தும் அளிக்கப்படும் மனுக்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.
சென்னை தியாகராய நகரில் 133-ஆவது வட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முகாமினை முதல்வா் மு.க.ஸ்டாலின், பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, மனுக்களை அளிக்க வந்த பொதுமக்களிடம் முகாமில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அவா் கேட்டறிந்தாா்.
முகாமில், பிறப்புச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தவா்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்கப்பட்டு வருவதையும், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அட்டைகள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு வழங்குவதையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டினாா். மேலும், வங்கிக் கணக்கு தொடங்குவதற்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருவதையும் அவா் ஊக்குவித்தாா்.
முகாமில் மனுக்கள் பெறுவதற்காக நிா்ணயிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து வரும் பொதுமக்களின் மனுக்களையும் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
மேலும், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கலைஞா் மகளிா் உரிமைத் திட்டம், பட்டா மாறுதல், சொத்து வரி போன்றவை குறித்து பெறப்படும் மனுக்களுக்கு தீா்வுகாண முன்னுரிமை அளிக்கவும் கேட்டுக் கொண்டாா்.
ஆய்வின்போது, சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ.கருணாநிதி, முதல்வரின் முகவரித் துறையின் சிறப்பு அலுவலரும், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலருமான பெ.அமுதா, மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.