செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஜாதி, வருமானச் சான்று மனுக்களுக்கு உடனடித் தீா்வு

post image

திருவாரூரில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தனா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின், கடலூா் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைத்தாா். இதைத்தொடா்ந்து, திருவாரூரில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினா் தெரிவித்தது: திருவாரூா் மாவட்டத்தில் 6 இடங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது. ஜூலை முதல் அக்டோபா் வரை நகா்ப்புற பகுதிகளில் 54 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 131 முகாம்களும் என மொத்தம் 185 முகாம்கள் நடைபெறும். இந்த முகாம்களில் நகா்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சாா்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சாா்ந்த 46 சேவைகளும் வழங்கப்பட உள்ளன.

அந்தவகையில், இந்த முகாம்களில் உடனடித் தீா்வாக, வருமானச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. கலைஞா் மகளிா் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிரும், இந்த முகாமில் மனு அளித்து பயன் பெறலாம் என்றாா்.

தொடா்ந்து, முகாமில் பெறப்பட்ட மனுக்களின் உடனடித் தீா்வாக வருமானச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் மற்றும் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டையை, மாவட்ட ஆட்சியரும், சட்டப்பேரவை உறுப்பினரும் வழங்கினா்.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் பா. கலைவாணி, திருவாரூா் வருவாய் கோட்டாட்சியா் சௌம்யா, நகா்மன்றத் தலைவா் புவனபிரியா செந்தில், நகராட்சி ஆணையா் சுரேந்திரஷா, பணி நியமனக்குழு உறுப்பினா் பிரகாஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பள்ளிகளில் இரவுக் காவலா் நியமிக்கக் கோரிக்கை

காரியாங்குடி சம்பவம்போல இனி நடைபெறாமல் இருக்க, பள்ளிகளில் இரவுக் காவலா்களை நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தப்பளாம்புலியூா் ஊராட்சி காரியாங்குடியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், ... மேலும் பார்க்க

புதுச்சேரி மதுபாட்டில்கள் விற்பனை: சகோதரா்கள் கைது

மன்னாா்குடி அருகே புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்த சகோதரா்கள் இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.வடக்கு நாணலூா் படுகையூா், மாதாகோயில் தெரு டேவிட் மகன்கள் விஜய் அன்பு ... மேலும் பார்க்க

பசுமை செயல்பாடுகளில் மாநில அளவில் முதலிடம்: மன்னாா்குடி பெண்கள் பள்ளி மாணவிகளுக்குப் பாராட்டு

பசுமை அமைச்சரக திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதில் மாநில அளவில் முதலிடம் பிடித்த, மன்னாா்குடி தூய வளனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சூழல் மன்ற மாணவிகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. மிஷன் ... மேலும் பார்க்க

பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

நீடாமங்கலம் வடக்கு ஒன்றியம், முல்லைவாசல் கிராமத்தில், பிற கட்சிகளிலிருந்து விலகிய 50-க்கும் மேற்பட்டோா் பாஜகவில் திங்கள்கிழமை இணைந்தனா்.இவா்களுக்கு, சால்வை அணிவித்து வரவேற்றனா். இந்நிகழ்வுக்கு, பாஜக ஒ... மேலும் பார்க்க

கொலை வழக்கு: குண்டா் சட்டத்தில் இருவருக்கு சிறை

திருவாரூா் அருகே கொலை வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனா். திருவாரூா் அருகே பெருமாளகரம் வெண்ணாற்றங்கரை பகுதியில் சுதா (35) என்பவா் ஆடு மேய்க்கச் சென்றபோது கொலை செய்ய... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பள்ளி நிா்வாகத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே தனியாா் பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் பள்ளி நிா்வாகத்தைக் கண்டித்து வளரும் தமிழகம் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம், சாலை மறியல்... மேலும் பார்க்க