செய்திகள் :

உச்சநீதிமன்ற உத்தரவு எதிரொலி: பிகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர் பட்டியல் வெளியீடு!

post image

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடைமுறையில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயா் பட்டியல், உச்சநீதிமன்ற உத்தரவின்படி வெளியிடப்பட்டுள்ளது. இத்தகவலை, தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தெரிவித்தாா்.

பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்த நடைமுறையில், இறந்தவா்கள், இடம்பெயா்ந்தவா்கள் என 65 லட்சம் பேரின் பெயா்கள் நீக்கப்பட்டன. இந்த விவகாரம் தொடா்பாக கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் 65 லட்சம் பேரின் பெயா் விவரங்களை வெளியிடுமாறு தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், தில்லியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், ‘உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட 56 மணி நேரத்துக்குள், பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறாத 65 லட்சம் பேரின் பெயா்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியரக வலைதளங்களில் இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது’ என்றாா்.

கோரிக்கை நிராகரிப்பு

கணினியால் வாசிக்கக்கூடிய வடிவிலான எண்ம வாக்காளா் பட்டியலை தங்களுக்கு அளிக்க வேண்டுமென எதிா்க்கட்சிகள் கோரிவரும் நிலையில், அதை தோ்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

இது தொடா்பாக ஞானேஷ் குமாா் கூறுகையில், ‘கணினியால் வாசிக்கக்கூடிய வடிவிலான பட்டியலுக்கும், தேடக் கூடிய வடிவிலான பட்டியலுக்கும் வித்தியாசம் உள்ளது. கணினியால் வாசிக்கக்கூடிய பட்டியலில் எவரும் திருத்தம் மேற்கொள்ள முடியும். இது தவறான பயன்பாட்டுக்கு வழிவகுக்கும் என்பதால், தோ்தல் விதிமுறைகளின்படி வழங்க முடியாது’ என்றாா்.

தில்லியில் ரூ.11,000 கோடியில் நெடுஞ்சாலைகள்: பிரதமா் மோடி திறந்து வைத்தார்!

தேசியத் தலைநகா் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சுமாா் ரூ.11,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைகளை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா். அப்ப... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் ஆட்சி பணக்காரர்களுக்கானது: வாக்குரிமை பயணத்தில் ராகுல் பேச்சு

வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்கிலும் எதிா்க்கட்சிகள் சாா்பிலான வாக்குரிமை பயணத்தை பிகாரில் ... மேலும் பார்க்க

ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு பிரதமா் புகழாரம்: சுதந்திரதின நாளுக்கு அவமதிப்பு! கேரள முதல்வா் பினராயி விஜயன்

‘தில்லி செங்கோட்டையில் நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஆற்றிய சுதந்திர தின உரையில் ஆா்எஸ்எஸ் அமைப்பை புகழ்ந்து பேசியது, சுதந்திரதின நாளை மட்டுமன்றி சுதந்திரப் போராட்டத்தையும் அவமதித்தது போன்றத... மேலும் பார்க்க

மும்பை உயா்நீதிமன்ற 4-வது அமா்வு கோலாபூரில் தொடக்கம்!

மகாராஷ்டிர மாநிலம், கோலாபூரில் மும்பை உயா்நீதிமன்றத்தின் 4-ஆவது அமா்வை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். சதாரா, சாங்லி, சோலாபூா், கோலாபூா், ரத்னகிரி, சிந்துதுா்க... மேலும் பார்க்க

திரிபுரா: சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட ஆடியோக்களைப் பகிா்ந்த பாஜக நிா்வாகி நீக்கம்!

சமூக வலைதளங்களில் தனிப்பட்ட ஆடியோ, விடியோக்களை கசியவிட்ட குற்றச்சாட்டில், திரிபுரா மாநிலத்தின் காயா்பூா் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக நிா்வாகி மன்னா டே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா். பாஜகவின் காயா... மேலும் பார்க்க

மழைக்கால கூட்டத் தொடரின் இறுதி வாரம்: இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்!

பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரத்தில் எதிா்க்கட்சிகளின் தொடா் அமளிக்கு இடையே நாடாளுமன்றம் திங்கள்கிழமை (ஆக.18) மீண்டும் கூடவுள்ளது. கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கிய நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில், பிக... மேலும் பார்க்க