கேரள செவிலியா் கல்லூரியில் ராகிங் கொடூரம்: மேலும் பல மாணவா்கள் பாதிப்பு? காவல்து...
உடலுறவு குறித்து சர்ச்சை கருத்து விவகாரம்: யூடியூபருக்கு காவல் துறை சம்மன்!
உடலுறவு குறித்து பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இவ்விவகாரத்தில் தொடர்புடைய யூடியூபர் சமய் ரெய்னா காவல் துறை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்படுள்ளது.
என்ன நடந்தது?
அண்மையில் நடைபெற்ற நகைச்சுவை நடிகர் சமய் ரெய்னாவின் இந்தியாஸ் காட் லேடண்ட் என்ற நிகழ்ச்சியில் பார்வையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ரன்வீர் அல்லபாடியா, 'பெற்றோர் உடலுறவு’ கொள்வது குறித்து அவர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையானது. இந்த விடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டது. இவ்விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.
கேலி என நினைத்து இந்திய கலாசாரத்தை அவமதிக்கும் விதத்திலும் மற்றவர்களைப் புண்படுத்தும் விதத்திலும் பேசியுள்ளதாக பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே குடும்ப அமைப்புகளை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளதாக ரன்வீர், அபூர்வா உள்ளிட்ட யூடியூபர்கள் மீது உச்சநீதிமன்ற வழக்குரைஞர் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து, இந்தியாவின் காட் லேடண்ட் காணொலிகள் அனைத்தையும் தனது யூடியூப் சேனலிலிருந்து நீக்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும், மேற்கண்ட வழக்கின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கப் போவதாக ரெய்னா நேற்று(பிப். 12) விளக்கமளித்து பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், மகாராஷ்டிர காவல் துறையின் இணையவழிக் குற்றச்செயல்கள் தடுப்புப் பிரிவான சைபர் க்ரைமும், மும்பை காவல் துறையும் யூடியூபர் சமய் ரெய்னாவை காவல் நிலையத்தில் அடுத்த 5 நாள்களுக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், சமய் ரெய்னா தற்போது அமெரிக்காவில் இருப்பதாகவும், இதனையடுத்து விசாரணைக்கு உடனடியாக ஆஜராக முடியாதென்பதால் கூடுதல் கால அவகாசம் கோரியிருப்பதாகவும் ரெய்னாவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.