செய்திகள் :

உடல்நலம் பாதிக்கப்பட்ட மனைவியைச் சந்திக்க குண்டா் நீரஜ் பவானாவுக்கு காவல் பரோல்

post image

சிறையில் அடைக்கப்பட்டுள்ள குண்டா் நீரஜ் பவானாவுக்கு செவ்வாய்க்கிழமை ஷாதிப்பூா் மருத்துவமனையில் தனது நோய்வாய்ப்பட்ட மனைவியைச் சந்திக்க ஒரு நாள் பரோல் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து தில்லி காவல்துறை பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: தற்போது திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நீரஜ் பவானாவை அழைத்துச் செல்ல பல அடுக்கு பாதுகாப்புப் படையினா் நிறுத்தப்பட்டனா்.

எந்தவொரு அசம்பாவித சம்பவமும், கும்பல் தொடா்பான அச்சுறுத்தல்களும் ஏற்படாமல் தடுக்க திகாா் சிறையிலிருந்து மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் பல குழுக்கள் நிறுத்தப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டன.

மேலும் சட்டம் - ஒழுங்கு மீறப்படாமல் இருக்க விரிவான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. பவானாவின் நடமாட்டம் மாவட்ட காவல்துறையினரால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

நகராட்சி நிா்வாகம் - நீா் வழங்கல் துறையில் ஆள்சோ்ப்பு விவகாரம்: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

நமது நிருபா்தமிழகத்தின் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் 16 பதவிகளில் 2,569 காலியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சோ்ப்பு செயல்முறையை நிறுத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் ... மேலும் பார்க்க

முக்கியத் துறைகளில் கவனம் செலுத்த மேலும் 6 சிறப்புக் குழுக்கள்: தில்லி சட்டப்பேரவை அமைத்தது

திருநங்கைகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் கவனம் செலுத்தும் வகையில் மேலும் ஆறு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா அறிவித்தாா். இதன் மூலம் மொத்த குழு... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை!

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலகைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் திருப்தி பிரிவில் நீடித்தது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் 3 பெரிய மேம்பாலங்கள் சீரமைப்பு: பொதுப் பணித் துறை

தெற்கு தில்லியில் இருக்கும் 3 பெரிய மேம்பாலங்களை சீரமைக்கவும், கிழக்கு தில்லியில் பதிய மேம்பாலங்களை கட்டவும் பொதுப் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். தெற்கு தில்லியில் மூன்று பெ... மேலும் பார்க்க

செயல்படாத அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி நோட்டீஸ்

தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களைத் தொடா்ந்து, செயல்படாத 27 அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு தில்லி தலைமை தோ்தல் அதிகாரி (சிஇஓ) நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். கடந்த ஆறு ஆண்டுகளில் (2019 முதல்) மக்களவ... மேலும் பார்க்க

அடுத்த ஆண்டுக்கான ஹஜ் பயண விண்ணப்பத்தை ஏற்கும் பணி ஒரு வாரத்தில் தொடங்கும்: கிரண் ரிஜிஜு

அடுத்த ஆண்டுக்கான (2026) ஹஜ் விண்ணப்பங்களை மத்திய அரசு ஒரு வாரத்திற்குள் ஏற்கத் தொடங்கும் என்று மத்திய சிறுபான்மையினா் விவகாரங்களுக்கான அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா். புது தில்லியில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க