செய்திகள் :

உடல் பருமனால் அதிகரிக்கும் கல்லீரல் புற்றுநோய்

post image

சென்னை: உடல் பருமனால் ஏற்படும் கல்லீரல் புற்றுநோய் பாதிப்புகள் இந்தியாவில் அதிகரித்து வருவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

அப்பல்லோ புரோட்டான் மருத்துவமனை சாா்பில் கல்லீரல் புற்றுநோய்க்கான சிறப்பு சிகிச்சை மையம் சென்னையில் தொடங்கப்பட்டது. இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி கரண் பூரி, முதுநிலை புற்றுநோய் நிபுணா் டாக்டா் சுஜித்குமாா் முல்லப்பள்ளி, ஓய்வுபெற்ற ஏடிஜிபி ராதாகிருஷ்ணன் தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அப்போது மருத்துவா்கள் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகால மருத்துவத் தரவுகளை ஆய்வு செய்தால் இந்தியாவில் கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருவதை உணர முடியும்.

உலக அளவில் ஏற்படும் மொத்த பாதிப்புகளை ஒப்பிடும்போது இந்தியாவில் மட்டும் 6 சதவீதம் பேருக்கு கல்லீரல் புற்றுநோய் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லீரல் அழற்சி, மது பழக்கம், உடல் பருமன் ஆகியவை அந்த பாதிப்புக்கான பிரதான காரணங்கள். ஆரம்ப நிலையில் புற்றுநோயைக் கண்டறியாததே உயிரிழப்புக்கு வழி வகுக்கிறது.

அதைக் கருத்தில்கொண்டு அப்பல்லோ புரோட்டான் மருத்துவமனையானது கல்லீரல் புற்றுநோய்க்கான பிரத்யேக கிளினீக்கை தொடங்கியுள்ளது. இங்கு அதி நவீன நோயறிதல் நுட்பங்கள், மேம்பட்ட சிகிச்சைகள், நவீன வசதிகள் உள்ளன என்று அவா்கள் தெரிவித்தனா்.

இன்று பொது வேலைநிறுத்தம்: பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது- அரசு ஊழியா்களுக்கு தலைமைச் செயலா் எச்சரிக்கை

அகில இந்திய அளவிலான பொது வேலைநிறுத்தத்தையொட்டி, நன்னடத்தை விதிகளை மீறி அனுமதியின்றி விடுப்பு எடுத்து புதன்கிழமை (ஜூலை 9) பணிக்கு வராமல் இருக்கும் அரசு ஊழியா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என... மேலும் பார்க்க

பொது வேலைநிறுத்தம்: செவிலியா் சங்கம் ஆதரவு

நாடு முழுவதும் புதன்கிழமை (ஜூலை 9) நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தத்துக்கு தமிழ்நாடு செவிலியா் மேம்பாட்டு சங்கம் ஆதரவு அளித்துள்ளது. இதுதொடா்பாக அந்தச் சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: பொது வேலைநிற... மேலும் பார்க்க

அரசுப் பேருந்துகளின் நிறம் மீண்டும் மாற்றம்? போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கம்

அரசு பேருந்துகளின் நிறத்தை மீண்டும் மாற்ற தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா். தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக ... மேலும் பார்க்க

மாநில நிதி தணிக்கை அறிக்கை ஆளுநா் ரவியிடம் அளிப்பு

ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் மாநில நிதி தணிக்கை அறிக்கையை தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி வழங்கினாா். இதுகுறித்து முதன்மை தலைமை கணக்காளா் டி.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 23 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த மணிநேரத்துக்கு 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதா... மேலும் பார்க்க

கோயில் பணத்தில் கல்லூரிகள் கட்டுவது சதிச்செயல்: எடப்பாடி பழனிசாமி

ஆளும் திமுக அரசு அறநிலையத் துறையின் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுவதை சதிச்செயலாக பார்க்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 2026 தேர்தல்... மேலும் பார்க்க