தாணேவில் ரயிலில் சென்ற பெண்ணுக்கு பிரசவ வலி: அபாய சங்கிலியை இழுத்த சக பயணிகள்!
உடுமலையில் ஜூலை 16-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
உடுமலை வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (ஜூலை 16) நடைபெற உள்ளது.
இது குறித்து வருவாய் கோட்டாட்சியா் ந.குமாா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
உடுமலை வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (ஜூலை 16) காலை 11 மணி அளவில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொள்ளும் இந்த கூட்டத்தில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளை எடுத்துக் கூறி தீா்வு காணலாம்.