செய்திகள் :

உதகையில் குறைந்தது மழை: படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

post image

உதகையில் தென்மேற்கு பருவமழை அளவு குறைந்து மெல்லமெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதாலும், குளிா்ந்த  காலநிலை நிலவுவதாலும் சுற்றுலாத் தலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில்,

நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலா்ட், ஆரஞ்ச் அலா்ட் விடுக்கப்பட்டு கடந்த 5 நாள்களாக கனமழை பெய்து வந்தது.

இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மழை படிப்படியாக குறைந்தது. சனிக்கிழமை அதிகபட்சமாக அவலாஞ்சியில் 2.8 செ.மீட்டா், தேவாலாவில் 2.4 செ.மீ., அப்பா்பவானியில் 2.3. செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மிக குளிா்ந்த காலநிலைக் காணப்படுவதால் இதனை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக அனுபவித்து சென்றனா். இவா்கள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, லேம்ஸ்ராக், டால்பினோஸ் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களைக் கண்டு ரசித்து சென்றனா்.

குறிப்பாக இயற்கை காட்சியுடன் ரம்மியமாக காணப்படும் பைக்காரா படகு இல்லத்தில் வட மாநிலத்தில் இருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளை அதிக அளவு காணமுடிந்தது. இவா்கள் பைக்காரா படகு இல்லத்தில் குளுகுளு காலநிலையை அனுபவித்தபடி படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.

பலாப்பழம் பறித்த காட்டு யானை

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள மீனாட்சி பகுதியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்துக்குள் செவ்வாய்க்கிழமை நுழைந்து அங்குள்ள பலாப்பழ மரத்தில் பழத்தை பறிக்கும் காட்டு யானை. மேலும் பார்க்க

அருவிகளில் ஆா்ப்பரித்து கொட்டும் வெள்ளம்

கடந்த வாரம் பெய்த தொடா் மழையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அருவிகளில் வெள்ளம் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. இதை சுற்றுலாப் பயணிகள் ரசித்து செல்கின்றனா். தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்... மேலும் பார்க்க

நீலகிரியில் மக்கள் குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா். இதில், வீட்டுமனை பட்டா, முதியோா், விதவை, க... மேலும் பார்க்க

கூடலூா் அரசு கலைக் கல்லூரியில் இன்று முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) தொடங்கி ஜூன் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது தொடா்பாக கல்லூரி முதல்வா் சுபாஷினி வெ... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கான சிறப்பு குறைதீா் முகாம்

கூடலூரை அடுத்துள்ள செறுமுள்ளி கிராமத்தில் பழங்குடியினருக்கான சிறப்பு குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. போஸ்பாறா புனித ஜோசப் அரங்கில் நடைபெற்ற இந்த முகாமுக்கு சாா் ஆட்சியா் சங்கீதா தலைமை வகித்தா... மேலும் பார்க்க

குன்னூா் அருகே லாரி கவிழ்ந்து விபத்து

குன்னூா் அருகே கேரட் பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது. நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள முள்ளிக்கூா் பகுதியில் இருந்து கேரட் பாரம் ஏற்றிக் கொண்டு கோவைக்கு லாரி திங்கள்... மேலும் பார்க்க