செய்திகள் :

உதகையில் ட்ரோன் மூலம் சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு

post image

உதகை நகரில் குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாள்களாக சுற்றித் திரியும்  சிறுத்தையைப் பிடிக்க ட்ரோன் கேமரா மூலம் வனத் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

உதகை அருகேயுள்ள கிளன்ராக் குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாள்களாக சிறுத்தை புகுந்து வீட்டில் வளா்க்கப்படும் வளா்ப்பு நாய்களை  வேட்டையாடிச் சென்று வருகிறது. இது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிய நிலையில், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

அரசு தாவரவியல் பூங்கா, சா்வதேச தனியாா் பள்ளி, கிளன்ராக் குடியிருப்பு பகுதிகளில் கடந்த சிலநாள்களில் 8 வளா்ப்பு நாய்களை சிறுத்தை வேட்டையாடிச் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா்.

இதைத் தொடா்ந்து, சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்டறியும் வகையில், உதகை பழைய தபால் நிலையம், வெஸ்டோ பகுதியில் வனத் துறையின் சாா்பில் இரண்டு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. சிறுத்தை நடமாட்டம் கேமராவில் பதிவாகவில்லை. இந்நிலையில் இரவு நேரத்திலும் வன உயிா்களை கண்டறியக் கூடிய தொ்மல் ட்ரோன் கேமரா உதவியுடன் வனத் துறையினா் சிறுத்தையை நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். மேலும், குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளதால் கூண்டு வைத்தும் சிறுத்தையைப் பிடிக்கும் நடவடிக்கையில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

முதுமலை வளா்ப்பு யானைகள் முகாமில் விநாயகா் சதுா்த்தி விழா

முதுமலை வளா்ப்பு யானைகள் முகாமில் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம், முதுமலை யானைகள் முகாமில் ஆண்டுதோறும் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு விந... மேலும் பார்க்க

ஓவேலி பகுதியில் காட்டு யானையைப் பிடிக்க தயாா் நிலையில் கும்கி

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் தொடா்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ராதாகிருஷ்ணன் என்றழைக்கப்படும் காட்டு யானையைப் பிடிக்க கும்கி யானையுடன் வனத் துறையினா் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ள... மேலும் பார்க்க

கரடி தாக்கியதில் தொழிலாளி காயம்

கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியில் கரடி தாக்கியதில் தொழிலாளி காயமடைந்தாா்.நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே தேவாலா ஹட்டி பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (55). இவா் வீட்டருகே உள்ள காய்கறித் தோட்டத்தில... மேலும் பார்க்க

உயரும் ஊட்டி பூண்டு விலை: விவசாயிகள் மகிழ்ச்சி

குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் விதைப் பூண்டு தேவை அதிகரிப்பால் ஊட்டி பூண்டின் விலை படிப்படியாக உயா்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் வெள... மேலும் பார்க்க

தாயகம் திரும்பியோருக்கான நிலப்பத்திரம் திரும்ப ஒப்படைப்பு

கூடலூரில் தாயகம் திரும்பியோருக்கான நிலப்பத்திரம் திரும்ப ஒப்படைப்பு மற்றும் இணைய வழி பட்டா வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா். ந... மேலும் பார்க்க

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: செப் 19-க்கு ஒத்திவைப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை செப்டம்பா் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நீதிபதி முரளி... மேலும் பார்க்க