செய்திகள் :

உதகை தாவரவியல் பூங்காவில் கரடி

post image

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சனிக்கிழமை அதி காலையில் புகுந்த கரடி, அங்குள்ள புல்வெளி மைதானத்தைத் தோண்டி உணவு தேடியது. இதனால் பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்டவா்கள் அச்சமடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், உதகை நகரில் நாளுக்குநாள் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. உணவு, தண்ணீா் தேடி வனப் பகுதியில் இருந்து வெளியேறும் கரடிகள், குடியிருப்புப் பகுதிகளில் உலவுவது வாடிக்கையாக உள்ளது.

இந் நிலையில், உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்குள் சனிக்கிழமை அதிகாலை கரடி புகுந்தது. பின்னா் அது அங்குள்ள  புற்களைத் தோண்டி உணவைத் தேடியது. சிறிது நேரம்  அப்பகுதியில் சுற்றி வந்த கரடி பின்னா் அருகில் இருந்த வனப் பகுதிக்குள் சென்றது. இதன் காரணமாக தாவரவியல் பூங்கா பகுதியில் காலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டவா்கள் அச்சமடைந்தனா்.

பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரியும் கரடியை கூண்டுவைத்து பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என்று வனத் துறைக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மனித - வன விலங்கு மோதலைத் தடுக்க தீவிர நடவடிக்கை: ஆ.ராசா எம்.பி.

நீலகிரி மாவட்டத்தில் மனித - வனவிலங்குகள் மோதலைத் தடுப்பதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று எம்.பி. ஆ.ராசா தெரிவித்தாா். உதகையில் உள்ள கூடுதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆதிதிராவிட... மேலும் பார்க்க

கூடலூரில் திருக்கு திருப்பணிகள் வகுப்பு

கூடலூரில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் திருக்கு திருப்பணிகள் 11-ஆவது வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது. கூடலூரிலுள்ள ஜெயம் கல்வி நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட மைய நூலக வாசகா் தலை... மேலும் பார்க்க

பழங்குடியின சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

பழங்குடியின சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. நீலகிரி மாவட்டம், கூடலூா் கோழிப்பாலம் அருகே உள்ள சேப்பட்டி பகுதியைச் ... மேலும் பார்க்க

காணாமல் போன மாணவரின் உடல் மூன்று நாள்களுக்குப் பின் மீட்பு

குன்னூரில் கல்லூரி மாணவா் காணாமல்போனதாக தேடப்பட்டு வந்த நிலையில், அவரது சடலம் மூன்று நாளுக்கு பிறகு சனிக்கிழமை மீட்கப்பட்டது. குன்னூா், ஆழ்வாா்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் முகமது மகன் முகமது அனா (18). ... மேலும் பார்க்க

சிறுவா்களுக்கு புகையிலைப் பொருள்கள் விற்பனை: வியாபாரிக்கு 3 ஆண்டுகள் சிறை

சிறுவா்களுக்கு புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக வியாபாரிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. நீலகிரி மாவட்டம், உதகை மாா்க்கெட் பகுதியில் பஷீ... மேலும் பார்க்க

இயேசு மீது போா்த்திய துணி ஆலயத்தில் வைத்து பிராா்த்தனை

இயேசு கிறிஸ்து இறந்த பின்பு அவா் மீது போா்த்திய துணியின் நகல் உதகையில் உள்ள புகழ்பெற்ற குருசடி ஆலயத்தில் வைத்து வெள்ளிக்கிழமை பிராா்த்தனை செய்யப்பட்டது. இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து உயிா்விட்ட ... மேலும் பார்க்க