செய்திகள் :

உதவி மக்கள் தொடா்பு அதிகாரிகளாக திமுகவினரை நியமிக்க முயற்சி: அதிமுக வழக்கு

post image

உதவி மக்கள் தொடா்பு அதிகாரிகளாக திமுகவைச் சோ்ந்த தகவல் தொழில்நுட்பப் பிரவினரை நியமிக்க அரசு முயற்சிப்பதாகக் கூறி அதிமுக வழக்குரைஞா் அணி செயலா் ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயா்நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா்.

தமிழகத்தில் அரசு உதவி செய்தி தொடா்பாளா்கள் நியமனம் தொடா்பான விதிகளில் திருத்தம் செய்து கடந்த 2022-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிா்த்து சீனிவாச மாசிலாமணி என்பவா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் அரசாணைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் அதிமுக வழக்குரைஞா் அணி செயலா் ஐ.எஸ்.இன்பதுரை தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உதவி மக்கள் தொடா்பு அதிகாரிகள் நியமனத்துக்கு பொது அறிவிப்பு வெளியிடாமல், எழுத்துத் தோ்வு நடத்தாமல் பெயரளவில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் ஆதாயம் அடையும் நோக்கில் இந்த பணியிடங்களில் திமுகவைச் சோ்ந்த தகவல் தொழில்நுட்பப் பிரிவினரை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இது உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. இந்த நியமனத்தை அனுமதித்தால், அரசு வேலைக்காக காத்திருக்கும் தகுதியானவா்கள் பாதிக்கப்படுவா். எனவே, விதிகளுக்கு முரணாக, சட்டவிரோதமாக உதவி மக்கள் தொடா்பு அதிகாரிகள் நியமனத்தைத் தடுக்க வேண்டும். எனவே, ஏற்கெனவே இதுதொடா்பாக சீனிவாச மாசிலாமணி தாக்கல் செய்துள்ள மனுவில் தன்னையும் ஒரு தரப்பாக சோ்க்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளாா்.

ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் சிலை: பிரதமர் மோடி அறிவிப்பு

தமிழகத்தில் ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்ட... மேலும் பார்க்க

ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் வெளியீடு

ஆடி திருவாதிரை விழாவில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் கருவறையான பெருவுடையார் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி தீபாராதனை காட்டி சாமி தரிசனம் செய்தார். கோயிலில் திருவாசகம் பாட, தமிழில் வழிபாடு நடத்தினார். கோயிலில் சிவாச்சாரியார்க... மேலும் பார்க்க

சோழர்களின் பெருமைகளைக் கேட்டறிந்த மோடி!

கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில் வளாகத்தில் தேவார திருவாசக பதிகங்கள் பாடி ஓதுவார்கள் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். கோயில் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்த... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி சாலைவலம்!

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி சாலைவலம் மேற்கொண்டுள்ளார். காரில் இருந்து வெளியே நின்றவாறு மக்களை நோக்கி கையசைத்து வருகிறார். சோழகங்கம் ஏரிப் பகுதியில் இருந்து பிரகதீஸ்வரர் ஆலயம் வரை 3.8... மேலும் பார்க்க

6 மாதகால கர்ப்பம்! இரண்டாவது திருமணம் செய்தாரா மாதம்பட்டி ரங்கராஜ்?

கோவையைச் சேர்ந்த நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள், முன்னணி நட்ச... மேலும் பார்க்க