செய்திகள் :

உத்தரகண்ட்: புனித யாத்திரைத் தலங்களை நிர்வகிக்க புதிய குழு! அமைச்சரவை ஒப்புதல்!

post image

உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள புனித யாத்திரைத் தலங்களை நிர்வகிக்க புதிய குழு அமைக்கப்படவுள்ளது.

உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான அமைச்சரவையில் அம்மாநிலத்திலுள்ள சார் தாம் மற்றும் ஆதி கைலாஷ் யாத்ரா உள்ளிட்ட புனித யாத்திரைத் தலங்களை நிர்வகிக்க புதிய குழுவை அமைக்க நேற்று (மே 16) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, முதல்வரின் செயலாளர் சையிலேஷ் பகாவுலி கூறுகையில், இமய மலைத் தொடரில் அமைந்துள்ள பல்வேறு வழிபாட்டுத் தலங்களுக்கும் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகின்றது. இதனால், அவற்றை நிர்வகிக்க உத்தரகண்ட் தரம்ஸ்வா மற்றும் தீர்தாதன் பரிஷாத் போன்ற தனிக்குழுக்கள் தேவை எனக் கூறியுள்ளார்.

மேலும், புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்குத் தேவையான உள்கட்டமைப்புகளை உருவாக்கி, நிர்வகிப்பதே அந்தக் குழுக்களின் பிரதான வேலை என்றும் அதன் மூலம் வழிபாட்டுத் தலங்களுக்கு மிகவும் எளிமையான, பாதுகாப்பான முறையில் செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், அந்தக் குழுவுக்கென்று அம்மாநில பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அம்மாநிலத்தில் மேம்படுத்தப்பட்டுள்ள சாலை மற்றும் விமானப் போக்குவரத்து வசதிகளினால் அங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ஜம்மு-காஷ்மீரில் வனப்பகுதிகளைச் சுற்றி வளைத்து பயங்கரவாத தேடுதல் வேட்டை

சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தம்: செனாப் நதி கால்வாயை நீட்டிக்க மத்திய அரசு திட்டம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த செனாப் கிளை நதியில் கட்டப்பட்டிருந்த கால்வாயின் நீளத்தை நீட்டிக்க ... மேலும் பார்க்க

‘இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் பொருளாதாரத்துக்கு உதவக் கூடாது’: குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா்

‘இந்தியாவின் நலன்களுக்கு எதிராகவுள்ள நாடுகளின் பொருளதாரத்துக்கு வா்த்தகம் மற்றும் சுற்றுலா மூலம் நாட்டு மக்கள் உதவக் கூடாது’ என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் சனிக்கிழமை வலியுறுத்தினாா். ஆபரே... மேலும் பார்க்க

ம.பி.: இளைஞரைக் கொன்று உடலில் பாதியை தின்ற புலி

மத்தியப் பிரதேசத்தில் பீடி இலைகளை சேகரிக்க சென்ற இளைஞரை கொன்று உடலில் பாதியை தின்ற புலியால் பரபரப்பு நிலவியது. மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் உள்ள கட்டாங்கி வனப்பகுதியில் பீடி இலைகளைச் சேக... மேலும் பார்க்க

பிரதமரின் உறுதியான அரசியல் நிலைப்பாட்டின் அடையாளம் ‘ஆபரேஷன் சிந்தூா்’: அமித் ஷா

பிரதமா் நரேந்திர மோடியின் உறுதியான அரசியல் நிலைப்பாட்டின் தனி அடையாளம் ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதம் தெரிவித்தாா். மேலும், ‘நாட்டின் பல்வேறு பாதுகாப்பு முகமைகளின் துல்லி... மேலும் பார்க்க

மும்பை விமான நிலையம், தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மும்பை விமான நிலையம், தாஜ் ஹோட்டலுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், மும்பை விமான நிலையம் மற்றும் தாஜ் ஹோட்டலுக்கு மிரட்டல் விட... மேலும் பார்க்க

தெலங்கானாவில் இஸ்ரேல் கொடியை அகற்றியவர் கைது!

தெலங்கானா மாநிலத்தில் இஸ்ரேல் கொடியை அகற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெலங்கானாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டியை முன்னிட்டு, ஹைதரபாத்திலுள்ள அம்மாநில அரசின் தலைமைச் செயலகம் அருகில் இஸ்ரேல் நாட்டின... மேலும் பார்க்க