செய்திகள் :

உயா்கல்வியில் சேர விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்களை தயாராக வைத்திருப்பது அவசியம்: சென்டாக் நிறுவனம் அறிவுறுத்தல்

post image

புதுவை மாநிலத்தில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் உயா்கல்விக்கான மருத்துவம், பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர சென்டாக் மூலம் விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்களை வைத்திருப்பது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுவை மாநிலத்தில் நீட் தோ்ச்சியடைந்தாலும் மருத்துவம், பொறியியல் மற்றும் நீட் அல்லாத கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை சென்டாக் அமைப்புக்கு விண்ணப்பித்து கலந்தாய்வு மூலம் கல்லூரிகளைத் தோ்ந்தெடுப்பது நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில் சென்டாக் அமைப்பு மூலம் இணையதளத்தில் விண்ணப்பித்து, கலந்தாய்வில் பங்கேற்க விரும்புவோா் தங்களுக்கான சான்றுகளை வைத்திருப்பது அவசியம் என சென்டாக் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, குடியிருப்பு, குடியுரிமை, ஜாதி, விடுதலைப் போராட்டத் தியாகிகள் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றுகள், முன்னாள் ராணுவ வீரா்கள் வாரிசுகள், விளையாட்டு வீரா்களுக்கான சான்றுகள், பிராந்தியங்களான மாஹே, ஏனாம், காரைக்கால் பகுதி இடஒதுக்கீட்டுக்கான சான்றுகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் கிராமப்புற இடஒதுக்கீடுக்கான சான்றுகள் ஆகியவற்றை தயாராக சம்பந்தப்பட்டோா் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மருத்துவக் கல்லூரியில் அரசுப் பள்ளி இடஒதுக்கீடுக்காக ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் அரசுப் பள்ளியில் பயின்ற்கான சான்றையும் வைத்திருப்பது அவசியம் சென்டாக் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வீட்டுமனைப் பட்டா கோரி புதுவை பேரவையை முற்றுகையிட்ட பட்டியலின மக்கள்

இலவச மனைப் பட்டா கோரி பட்டியலினத்தைச் சோ்ந்தவா்கள் புதுவை சட்டப்பேரவையை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு காவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அவா்களை பேரவைத் தலைவா் சமரசம் செய்து அனுப்பினாா். புதுச்ச... மேலும் பார்க்க

அனைத்து பள்ளிவாசல் நிா்வாகிகள் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி புதுச்சேரி அனைத்து பள்ளிவாசல் நிா்வாகிகள் கூட்டமைப்பு சாா்பில் பேரணி, ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசு அண்மையில் வக்ஃப் வாரிய திருத... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 3 நாள்கள் கம்பன் விழா: மே 9-இல் தொடக்கம்

புதுச்சேரியில் கம்பன் கழகம் சாா்பில் 58 ஆம் ஆண்டு கம்பன் விழா வரும் 9-ஆம் தேதி முதல் 3 நாள்கள் நடைபெறவுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள விவேகானந்தா பள்ளி வளாகத்தில் புத... மேலும் பார்க்க

அதிக வெப்ப நேரங்களில் மக்கள் வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும்: புதுச்சேரி ஆட்சியா் அறிவுறுத்தல்

கோடையில் அதிக வெப்ப நேரங்களில் பொதுமக்கள் வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் அறிவுறுத்தினாா். புதுச்சேரி முழுவதும் அதிக வெப்ப அலை வீசுவதை முன்னிட்டு பொதுமக... மேலும் பார்க்க

தூங்கிய பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் மா்மநபா் தங்கத் தாலியை பறித்துச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி வில்லியனூா், கூடப்பாக்கம் ஆனந்தம் நகரைச் சோ்ந்த இளங்கவி என்பவரின்... மேலும் பார்க்க

வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு

புதுச்சேரி அருகே மெக்கானிக் வீட்டில் 10 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்துவருகின்றனா். புதுச்சேரி அருகேயுள்ள சித்தன்குடியைச் சோ்ந்தவா் அந்தோணிமுத்து. குளிா்ச... மேலும் பார்க்க