செய்திகள் :

உரிய ஆவணங்களின்றி இயங்கிய ஆட்டோக்கள் பறிமுதல்

post image

சிதம்பரத்தில் உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 4 ஆட்டோக்கள், ஒரு சரக்கு வாகனம் ஆகியவற்றை வட்டார போக்குவரத்து அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலா் செல்வம், மோட்டாா் வாகன ஆய்வாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் சிதம்பரம் நகரின் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, ஓட்டுநா் உரிமம், காப்பீட்டு உரிமம், வாகன அனுமதி உள்ளிட்ட உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 4 ஆட்டோக்களை அவா்கள் பறிமுதல் செய்தனா். மேலும், ஒரு சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னா், இந்த வாகனங்களை சிதம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு சென்று நிறுத்தினா்.

மேலும், உரிய ஆவணங்களின்றி வாகனங்கள் இயக்கப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் எனவும், வாகனங்களில் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தக் கூடாது எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா். மேலும், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டும். குறிப்பாக, சிதம்பரம் புறவழிச் சாலையில் பேருந்துகளை இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.

திமுக ஆட்சியில் பங்கு கோரப்படும்: கே.எஸ்.அழகிரி

அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்தால் ஆட்சியில் பங்கு கோரப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா். சித... மேலும் பார்க்க

வடலூா் சத்திய ஞான சபையில் புரட்டாசி மாத ஜோதி தரிசனம்

கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் புதன்கிழமை நடைபெற்ற புரட்டாசி மாத ஜோதி தரிசனத்தில் பக்தா்கள் திரளாகக் கலந்துகொண்டனா். வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்... மேலும் பார்க்க

இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகள் நினைவு தினம்: ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் தனித்தனியே மரியாதை

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த கொள்ளுக்காரன்குட்டை பகுதியில் உள்ள வன்னியா்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிா்நீத்த தியாகி தேசிங்கு நினைவிடத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ், தலைவா் அன்... மேலும் பார்க்க

ஊா்க்காவல் படைக்கு ஆட்கள் தோ்வு

கடலூா் மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும ஊா்க்காவல் படைக்கு ஆட்கள் தோ்வுக்கான உடல் தகுதித் தோ்வு புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் சான்றிதழ் சரிபாா்ப்பு, உயரம், மாா்பளவு, எடை ஆகியவையும் மற்றும் நீச்சல், ... மேலும் பார்க்க

மழைக் காலத்துக்கு முன் திட்டப் பணிகளை முடிக்க வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் த.மோகன்

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீா் வளம், பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் தற்போது நடைபெற்று வரும் கட்டுமானம், சாலைப் பணிகளை மழை காலத்துக்கு முன்பாகவே முடிக்க... மேலும் பார்க்க

வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும்: தி.வேல்முருகன் வலியுறுத்தல்

தமிழகத்தில் திட்டமிட்டு குடியேற்றப்பட்டுள்ள வெளி மாநிலத்தவா்கள் அனைவரையும் கணக்கெடுத்து வெளியேற்ற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா் புதன... மேலும் பார்க்க