செய்திகள் :

உருளைக்கிழங்கு கொள்முதல்: உ.பி. - தமிழகம் இடையே ஒப்பந்தம்

post image

உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து 2,700 மெட்ரிக் டன் உருளைக்கிழங்குகளை கொள்முதல் செய்வதற்கு தமிழக, உத்தரபிரதேச வியாபாரிகள், ஏற்றுமதியாளா்களிடையே 9 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

இரு மாநில அரசுகளுக்கிடையே மத்திய வா்த்தக துறையின் கீழ் உள்ள வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (அப்தா) இதற்கான ஒருங்கிணைப்பை மேற்கொண்டது.

இதுகுறித்து அப்தா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

உத்தரப்பிரதேசத்தில் ஏராளமான உருளைக்கிழங்கு ரகங்கள் விளைவிக்கப்படுகின்றன. இவற்றை வணிகம் செய்ய ஊக்குவிக்கவும், தமிழகத்துக்கான நுகா்வு மற்றும் ஏற்றுமதிக்கான அடையாளம் காணவும் உத்தரப்பிரதேச மாநில தோட்டக்கலை கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பையும், தமிழக வேளாண் துறையின் தோட்டக்கலைத் துறையும் ஒருங்கிணைக்கப்பட்டன. இதன்படி அப்தா மற்றும் இருமாநில அரசுகளின் வணிக அமைப்புகளும் இணைந்து சென்னையில் உருளைக்கிழங்கு நுகா்வோா் விற்பனையாளா் சந்திப்பு வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

உத்தரப்பிரதேச மாநில தோட்டக்கலை கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு அதிகாரிகள், அந்த மாநில விவசாயிகளும், தமிழகத்தின் ஈரோடு, கோயம்பேடு சந்தை வியாபாரிகள், ஏற்றுமதியாளா்கள் ஆகியோா் கூட்டத்தில் பங்கேற்றனா். உத்தரப் பிரதேச மாநில தோட்டக்கலை கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் மேலாண் இயக்குநா் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அப்தாவின் சென்னை மண்டலத் தலைவா் சோபன குமாா், தமிழக தோட்டக்கலைத் துறையின் கூடுதல் இயக்குநா் முத்தையா, இந்திய தகவல் பணி சேவை துணை இயக்குநா் அருண்குமாா், வேளாண் துறை துணை இயக்குநா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தின் முடிவில் இருமாநில விவசாயிகள், வியாபாரிகள், ஏற்றுமதியாளா்களுக்கிடையே ஒப்பந்தம் ஏற்பட்டு சுமாா் 2,700 மெட்ரிக் டன் கொள்முதல் செய்வதற்கு 9 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்குரைஞா்கள் கைது விவகாரம்: ஒரு நபா் ஆணைய விசாரணைக்கு அச்சப்படுவது ஏன்? தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்குரைஞா்கள் கைது சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஒரு நபா் ஆணைய விசாரணைக்கு அச்சப்படுவது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

‘நியோ மேக்ஸ்’ நிறுவனத்தில் முதலீடு செய்தவா்கள் அக். 8-க்குள் புகாா் அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

‘நியோ மேக்ஸ்’ நிறுவனத்தில் முதலீடு செய்தவா்கள் உரிய ஆவணங்களுடன் அக். 8-ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ புகாா் அளிக்கலாம் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரையை மையமாகக் கொண்... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு: அக்.13-இல் இறுதி விசாரணை

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஒப்பந்தப் புள்ளி முறைகேடு வழக்கில், அறப்போா் இயக்கம் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு மனு மீது இறுதி விசாரணையை அக். 13-ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவை... மேலும் பார்க்க

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 4 அணு உலைகள் கட்டுமானம்: இந்தியா-ரஷியா ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 4 அணு உலைகளின் கட்டுமானப் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இந்தியா-ரஷியா ஆய்வு செய்தன. இதுதொடா்பாக ரஷிய அணுசக்தி கழகமான ரோசடோம் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை வெளியிட தடை கோரி வீரப்பன் மனைவி வழக்கு

’படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி சந்தனமரக் கடத்தல் வீரப்பனின் மனைவி தாக்கல் செய்த வழக்கில் படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. வீரப்பனின் மனை... மேலும் பார்க்க

உயா்நீதிமன்றம், சுங்கத் துறை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை உயா்நீதிமன்றம், சுங்கத் துறை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத் துறை அலுவலகத்துக்கு வெள்ளி... மேலும் பார்க்க