செய்திகள் :

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணி வென்ற பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

post image

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி வென்ற பரிசுத் தொகை எவ்வளவு என்பதைப் பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் இறுதிப் போட்டி நாளை(ஜூன் 11) இங்கிலாந்தின் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கவுள்ள நிலையில், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடவிருக்கின்றன.

கடந்த இரண்டு தொடர்களிலும் இரண்டாமிடம் பிடித்த இந்திய அணி, இந்தத் தொடரில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் ஆகிய தொடர்களால் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால், மூன்றாம் இடம் பிடித்தது.

முதலிடத்தைப் பிடிக்கும் அணிக்கு 36 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படவிருக்கின்றன. இது இந்திய மதிப்பில் ரூ. 30 கோடியாகும். அதேபோன்று இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு 21 லட்சம் அமெரிக்க டாலர்கள்(ரூ. 18 கோடி) கிடைக்கும். இது கடந்தாண்டைவிட 16 லட்சம் அமெரிக்க டாலர்கள் அதிகமாகும்.

மூன்றாமிடம் பிடித்த இந்திய அணிக்கு 14.40 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசாக கிடைக்கும். இது இந்திய மதிப்பில் ரூ.12.32 கோடியாகும்.

மற்ற அணிகளுக்கான பரிசுத் தொகை விவரம்

  • முதல் பரிசு - 36 லட்சம் டாலர்கள்

  • 2-வது பரிசு - 21 லட்சம் டாலர்கள்

  • 3-வது இடம் - இந்தியா (14.40 லட்சம் டாலர்கள்)

  • 4-வது இடம் - நியூசிலாந்து (10 லட்சம் டாலர்கள்)

  • 5-வது இடம் - இங்கிலாந்து (9, 60,000 டாலர்கள்)

  • 6-வது இடம் - இலங்கை (8,40,000 டாலர்கள்)

  • 7-வது இடம் - வங்கதேசம் (7,20,000 டாலர்கள்)

  • 8-வது இடம் - மேற்கிந்திய தீவுகள் (6,00,00 டாலர்கள்)

  • 9-வது இடம் - பாகிஸ்தான் (4,80,000 டாலர்கள்)

இதையும் படிக்க: பெண் நடுவருடன் வாக்குவாதம்: அஸ்வினுக்கு அபராதம்!

கம்மின்ஸ் 6 விக்கெட்டுகள்: 138 ரன்களுக்கு சுருண்ட தென்னாப்பிரிக்கா!

ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் அசத்தல் பந்துவீச்சால் தெ.ஆ. அணி 138 ரன்களுக்கு சுருண்டது.லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸி. 121க்கு ஆல் அவுட் ஆக, முதல் நாள் முடி... மேலும் பார்க்க

பிஜிடி தொடரின் தோல்விக்குப் பின் கோலியை கேப்டனாக்கி இருப்பேன்: ரவி சாஸ்திரி

விராட் கோலியின் ஓய்வு சரியாக கையாளப்பட்டிருக்க வேண்டுமென ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.ஆஸ்திரேலியாவுடனான பிஜிடி தொடரின் தோல்விக்குப் பிறகு விராட் கோலி தனது ஓய்வை அறிவித்தார். அதாவது, கடந்த மாதம் ஐபிஎல் போ... மேலும் பார்க்க

2-ஆம் நாள் உணவு இடைவேளை: பெடிங்ஹாமின் நிதான ஆட்டத்தால் தெ.ஆ. எழுச்சி!

டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் 2ஆம் நாளின் உணவு இடைவேளை வரை தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்களை எடுத்துள்ளது. லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்... மேலும் பார்க்க

குழந்தைகளுடன் சேர்ந்து லபுஷேனிடம் கையெழுத்து வாங்கிய ஏபிடி வில்லியர்ஸ்..!

ஏபிடி வில்லியர்ஸ் தனது குழந்தைகளுடன் மார்னஸ் லபுஷேனிடம் கையெழுத்து வாங்கிய விடியோ வைரலாகியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியைப் பார்க்க பல முன்னாள்... மேலும் பார்க்க

ஆர்சிபி அணியை வாங்க நான் என்ன பைத்தியக்காரனா? டி.கே.சிவக்குமார் ஆவேசம்!

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் “நான் ஏன் ஆர்சிபி அணியை வாங்கப் போகிறேன். நான் என்ன பைத்தியக்காரனா?” எனக் கூறியுள்ளார். ஐபிஎல் தொடங்கிய 18 ஆண்டுகளில் ஆர்சிபி இந்தாண்டு முதல்முறையாக கோப்பையை வெ... மேலும் பார்க்க

டபிள்யூடிசி: முதல் இன்னிங்ஸில் கற்றுக்கொண்ட பாடம் என்ன? ஸ்டீவ் ஸ்மித் பதில்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித் தான் கற்றுக்கொண்ட பாடம் குறித்து பேசியுள்ளார். டபிள்யூடிசி இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் ஆஸி. 212-க்கு ஆல... மேலும் பார்க்க