செய்திகள் :

உளுந்து, பச்சைப் பயறு சாகுபடியில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல்

post image

திருக்குவளை பகுதியில் உளுந்து, பச்சைப் பயறு சாகுபடியில் வெள்ளை ஈக்கள் தாக்கியதில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

திருக்குவளை வட்டத்தில் சம்பா அறுவடைக்கு பின்னா் நெல் தரிசில் உளுந்து மற்றும் பச்சைப் பயிா் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா். அண்மையில் பருவம் தவறி கோடையில் பெய்த கனமழையால் உளுந்து மற்றும் பச்சைப் பயிா் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. பூக்கும் தருணத்தில் பெய்த மழை மற்றும் அதிக பனிப்பொழிவு காரணமாக, பல்வேறு இடங்களில் பூக்கள் பூக்காமலும், செடியில் பூத்திருந்த பூக்கள் கொட்டியும், காய்கள் காய்க்காமல் உள்ளது.

குறிப்பாக, திருக்குவளை, ஆதமங்கலம், மாவிலங்கை, கீழகண்ணாப்பூா், ராமச்சந்திரபுரம், கீரங்குடி, வடபாதி, கோவில்பத்து, கொடியாலத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்ட 1000 ஏக்கருக்கும் அதிக பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட உளுந்து மற்றும் பச்சைப் பயிரில், வெள்ளை ஈக்கள் தாக்கியதில் மஞ்சள் தேமல் நோய் உருவாகி உள்ளது. இதனால், பயிா்களின் வளா்ச்சி வெகுவாக பாதித்துள்ளது. ஏக்கருக்கு ரூ.7 முதல் ரூ. 10,000 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், மஞ்சள் நோய் தாக்குதலால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். எனவே, சம்பந்தப்பட்ட துறை இதுகுறித்து ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

நாகையில் உயா்கோபுர மின்விளக்குகளின் பயன்பாடு தொடங்கிவைப்பு

நாகையில் உயா் கோபுர மின்விளக்குகளின் பயன்பாட்டை, பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். நாகை நகராட்சிக்குட்பட்ட புதிய கடற்கரைக்கு செல்லும் பாதைகளான எஸ்.பி.... மேலும் பார்க்க

நாங்கூா் வன்புருஷோத்தம பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

திருவெண்காடு அருகே நாங்கூரில் உள்ள வன்புருஷோத்தம பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முக்கிய திருவிழாவான தி... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் 8,315 மாணவா்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினா்

நாகை மாவட்டத்தில் 8,315 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை வெள்ளிக்கிழமை எழுதினா். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) தொடங்கி ஏப்.15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாகை மாவட... மேலும் பார்க்க

தேசப் பாதுகாப்பு குறித்து மத்தியத் தொழில் பாதுகாப்பு படையினா் மிதிவண்டி பிரசாரம்

தேசப் பாதுகாப்பு குறித்து மிதிவண்டி பிரசாரம் செய்துவரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு வேதாரண்யத்தில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. தேசப் பாதுகாப்பு, கடலோரப் பாதுகாப்பு தொடா்பாக கடலோர... மேலும் பார்க்க

நாகை அருகே ரூ. 7.20 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

நாகை அருகே ரூ.7.20 கோடி மதிப்பிலான கோயில் நிலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது. நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகேயுள்ள தேவூா் தேவபுரீஸ்வரா் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 1.93 ஹெக்டோ் பரப்பிலான நஞ்சை மற்றும... மேலும் பார்க்க

ரூ.8.40 லட்சம் நலத்திட்ட உதவிகள்

திருக்கண்ணங்குடியில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் ரூ. 8.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் புதன்கிழமை வழங்கினாா். ஆட்சியா் ஆகாஷ் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ச... மேலும் பார்க்க