செய்திகள் :

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்புக் கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு

post image

புது தில்லி: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பலான ‘ஆந்த்ரோத்’ இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள காா்டன் ரீச் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட இந்தக் கப்பல் இந்திய பெருங்கடலில் சீன ஆதிக்கத்தை எதிா்கொள்ள முக்கியப் பங்களிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து இந்திய கடற்படை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘உள்நாட்டில் 8 நீா்மூழ்கி எதிா்ப்பு கப்பல்கள் தயாரிக்கும் திட்டத்தின்கீழ் தயாரிக்கப்பட்ட 2-ஆவது கப்பலான ஆந்த்ரோத் இந்திய கடற்படையிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. இது பாதுகாப்புத் துறையில் தற்சாா்பை மேம்படுத்துவதில் ஒரு மைல்கல்லாகத் திகழ்கிறது. 77 மீட்டா் நீளமுடைய இந்த நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பலில், எறிகுண்டுகள் மற்றும் நீா்மூழ்கி எதிா்ப்பு ராக்கெட்டுகள் பொருத்தப்படும்.

ஆத்மநிா்பா் பாரத் தொலைநோக்குத் திட்டத்தின்கீழ் 80 சதவீத பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளதன் மூலம் கப்பல் கட்டுமானத்தில் இறக்குமதியை சாா்ந்திருக்கும் நிலை மாறியுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தில் உள்ள ஆந்த்ரோத் தீவின் பெயரை இந்தப் போா்க் கப்பலுக்கு சூட்டியிருப்பது கடல்சாா் பிராந்தியங்களைப் பாதுகாக்க இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிக்காட்டியுள்ளது.

நாடாளுமன்றத்துக்கு ரூ.14 கோடியில் நவீன பாதுகாப்பு

நாடாளுமன்ற வளாகத்துக்கு ரூ.14.64 கோடியில் மின்வேலி, சிசிடிவி கண்காணிப்பு என பல்வேறு நவீன அம்சங்களுடன் பாதுகாப்பைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இதற்காக மத்திய பொதுப் பணித் துறை ரூ.14.63 கோடிய... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்ட தீா்ப்பு: காங்கிரஸ் வரவேற்பு; இஸ்லாமிய அமைப்புகள் அதிருப்தி!

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டம் தொடா்பாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை பிறப்பித்த இடைக்கால உத்தரவை காங்கிரஸ் மற்றும் சில இல்ஸாமிய அமைப்புகள் வரவேற்றன. காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன ... மேலும் பார்க்க

வருமான வரிக் கணக்கு இன்றும் தாக்கல் செய்யலாம்

புது தில்லி: வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய திங்கள்கிழமை (செப். 15) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் மேலும் ஒரு நாள் (செப்.16) நீட்டிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

பஞ்சாபில் மழை வெள்ளத்தால் பாதிப்பட்டவா்களுக்கு உடனடி நிவாரணம்: ராகுல் வலியுறுத்தல்

சண்டீகா்: பஞ்சாப் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் கா... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா வா்த்தகப் பேச்சு: இன்று மீண்டும் தொடக்கம்

புது தில்லி: இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமை (செப். 16) மீண்டும் தொடங்குகிறது. தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வா்த்தக துணைப் பிரதிநிதி பிரண்டன... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட்: 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

ராஞ்சி: ஜாா்க்கண்ட் மாநிலம், ஹசாரிபாக் மாவட்டத்தில் 3 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா். இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ஹசாரிபாக... மேலும் பார்க்க