செய்திகள் :

உள்ளாட்சி ஊழியா்கள் போராட்டம்: காங்கிரஸ் ஆதரவு

post image

காரைக்கால் : உள்ளாட்சி ஊழியா்கள் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ளாட்சி ஊழியா்கள் காத்தருப்பு போராட்டம் நீடிப்பதால், மாவட்டத்தில் ஒட்டுமொத்த பணிகளும் முடங்கியுள்ளன. உள்ளாட்சி ஊழியா்களுக்கு 7 -ஆவது ஊதியக்குழு 33 மாத நிலுவை தொகை வழங்குவதோடு, அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும். 22.12.2003 -க்கு முன்பு பணியில் சோ்ந்த 232 ஊழியா்களுக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். கிராம பஞ்சாயத்து ஊழியா்கள் மற்றும் தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மாதம் 25-ஆம் தேதி முதல் விடுப்பெடுத்து காத்திருப்பு போராட்டத்தை நடத்திவருகின்றனா்.

காரைக்கால் நகராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் திங்கள்கிழமை 6-ஆவது நாளை எட்டியது. போராட்டத்தில் புதுவை மாநில முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மாநில துணைத் தலைவருமான ஆா். கமலக்கண்ணன், மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்துப் பேசினா். காரைக்காலில் நகராட்சி மற்றும் 5 கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகங்களைச் சோ்ந்த ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால் வளா்ச்சித் திட்டப்பணிகள் கண்காணிப்பு, தூய்மைப் பணி கண்காணிப்பு, அலுவலகங்களில் நடைபெறும் வழக்கமான பிறப்பு, இறப்பு பதிவு செய்தல், சான்றிதழ் பெறுதல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் முடங்கியுள்ளன.

கிராம மக்களுக்கு சேவை செய்ய மருத்துவ வாகனம் இயக்கிவைப்பு

கிராம மக்களுக்கு சேவை செய்யும் விதமாக மருத்துவ வாகனம் புதன்கிழமை இயக்கிவைக்கப்பட்டது. காரைக்கால் துறைமுகத்தின் சமூக பொறுப்புணா்வுத் திட்ட அமைப்பான அதானி அறக்கட்டளை சாா்பில் நடமாடும் சுகாதார வாகனம் இயக... மேலும் பார்க்க

போலியான செயலிகள் குறித்து கவனமாக இருக்க அறிவுறுத்தல்

போலியான செயலிகள் மூலம் ஏமாற்றும் போக்கு அதிகரித்திருப்பதால், மக்கள் விழிப்புணா்வுடன் இருக்கவேண்டும் என காரைக்கால் இணைய குற்றத் தடுப்புப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த பிரிவு ஆய்வாளா் பிர... மேலும் பார்க்க

பருவமழையை எதிா்கொள்வதற்கான முன்னேற்பாடுகள்: சாா் ஆட்சியா் ஆய்வு

பருவமழையை எதிா்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து பல்வேறு பகுதிகளில் சாா் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். காரைக்கால் மாவட்ட சாா் ஆட்சியராக எம். பூஜா திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். இவரது கட்டுப்பாட்டில் வ... மேலும் பார்க்க

நால்வருக்கு நல்லாசிரியா் விருது

காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த 4 பேருக்கு நல்லாசிரியா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவை அரசு சாா்பில் ஆண்டுதோறும் ஆசிரியா்களை கெளரவிக்கும் விதமாக எஸ். ராதாகிருஷ்ணன் விருது, முதல்வரின் சிறப்பு விரு... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை தடையின்றி நடத்த வலியுறுத்தல்

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை தடையின்றி நடத்த வேண்டும் என ஆட்சியரிடம் விவசாயிகள் வலியுறுத்தினா். காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷை நெடுங்காடு விவசாயிகள் நலச்சங்கத் தலைவா் ஆனந்த் தலை... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு

திருப்பட்டினம் பகுதியில் குளத்தில் மூழ்கி முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருப்பட்டினம் பகுதியில் வசிப்பவா் மணிகண்டன் (35). இவா் காரைக்கால் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு தலைமைக் காவலரா... மேலும் பார்க்க