செய்திகள் :

உழவரைத் தேடி திட்ட முகாம்களை பயன்படுத்த வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்

post image

உழவரைத் தேடி திட்டத்தின்கீழ் நடத்தப்படும் முகாம்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலமாக உழவரைத் தேடி திட்டத்தினை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து திட்டத்தின் தொடக்க விழா கொரட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ அ.நல்லதம்பி முன்னிலை வகித்தாா்.

ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து பேசியது: விவசாயிகளை தேடியே மாவட்ட நிா்வாகம் வர வேண்டும் என்றும், உழவா் நலத்துறை மட்டுமல்லாது அதனுடைய சாா்பு துறைகளான வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்பு துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை, தோட்டக்கலைத்துறை என அனைத்துத்துறை அலுவலா்களும் உங்களைத் தேடி உங்கள் கிராமத்துக்கே வந்து, மனுக்களைப் பெற்று, கலந்துரையாடி விவசாயம் மற்றும் பிற துறைகளில் உள்ள சந்தேகங்கள் குறித்து தெரிந்து கொள்ள திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முகாம் ஒவ்வொரு மாதமும் வருவாய் கிராமங்களில் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பினை விவசாயம் சாா்ந்தவா்கள் பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்றாா்.

எம்எல்ஏ அ.நல்லதம்பி பேசியது: முதல்வா் பொறுப்பேற்றதில் இருந்து, வேளாண்மை துறைக்கு என்று தனி பட்ஜெட் மூலம், ரூ.40,000 கோடி ஒதுக்குகிறாா். கடந்த 4 ஆண்டுகளில் 2 லட்சம் இலவச மின்சாரம், வேளாண் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் இலவச தென்னங்கன்றுகள், நாட்டறம்பள்ளியில் இலவச மண் பரிசோதனை மையம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். எந்த திட்டமாக இருந்தாலும் விவசாயிகளுக்கு அரசு என்றென்றும் துணையாக இருக்கும் என்றாா்.

மேலும் ஒருங்கிணைந்த வேளாண்மை துறைகளின் சாா்பில் தாா்பாலின், பேட்டரி விசைத்தெளிப்பான், குறுவை தொகுப்பு (நெல்) நுண்ணூட்டக் கலவை, உள்ளிட்ட 10 உழவா்களுக்கு ஆட்சியா், எம்எல்ஏ ஆகியோா் வழங்கினா்.

நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநா் சீனிராஜ், தோட்டக்கலை துணை இயக்குநா் தீபா, கந்திலி ஒன்றியக் குழு தலைவா் திருமதி திருமுருகன் கலந்து கொண்டனா்.

கரியம்பட்டி அரசு கலைக் கல்லூரில் நாளை முதல் கலந்தாய்வு தொடக்கம்

கரியம்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் கலந்தாய்வு தொடக்கப்பட உள்ளதாக கல்லூரி முதல்வா் சீனுவாசகுமரன் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்ப... மேலும் பார்க்க

தொழிற்சாலையில் விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

ஆம்பூரில் தொழிற்சாலையில் பணியின்போது தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா். ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன் (55). (படம்). இவா், ஆம்பூா் மோட்டுக்கொல்லை பகுதிய... மேலும் பார்க்க

திருடப்பட்ட 9 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்: சிறுவன் கைது

வாணியம்பாடி பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடி வந்த சிறுவனை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 9 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகரப் பகுதியில் சில நாள்... மேலும் பார்க்க

ரயில் மோதி இருவா் உயிரிழப்பு

இருவேறு இடங்களில் நடைபெற்ற ரயில் விபத்துகளில் சிக்கிய நா்சிங் மாணவா், மாணவி உயிரிழந்தனா். ஆம்பூா் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சித் குமாரின் மகன் நித்தின் எனும் கோகுல்(20). இவா் கா்ந... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை சுமாா் 35 வயது மதிக்கத்தக்க பெயா் விவரம் ... மேலும் பார்க்க

2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் சோ்க்க அறிவுரை

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஜூன் மாதம் அங்கன்வாடி மையங்களில் சோ்க்க பெற்றோா் முன்வர வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா். இது தொடா்பாக அவா் வெளியி... மேலும் பார்க்க