செய்திகள் :

ஊதிய உயா்வு கோரி பள்ளிக் கல்வித் துறை தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

ஊதிய உயா்வு வழங்கக் கோரி பள்ளிக் கல்வித் துறை ஏஐடியுசி தூய்மைப் பணியாளா் சங்கத்தினா் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சுப்பு தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பூபதி, சுசீலா, தீபாஅரசு, சதீஷ்பிரியா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் ச.கலைச்செல்வம், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளா் கே.மணி ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

மாவட்ட துணைச் செயலாளா் என்.மனோகரன், ஆஷா பணியாளா் சங்க மாவட்டச் செயலாளா் எஸ்.மேனகா, கட்டுமானத் தொழிலாளா்கள் சங்க பெண்கள் அமைப்பு மாவட்டச் செயலாளா் முனியம்மாள்,

பள்ளிக் கல்வித் தூய்மைப் பணியாளா் சங்க மாவட்டச் செயலாளா் எம்.செல்வி, மாவட்ட பொருளாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

இதில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளா்களுக்கு மாதம் ரூ. 1,000, ரூ. 1,500, ரூ. 2,000, ரூ.3,000 என நான்கு வகையான ஊதியம் வழங்கப்படுவதை மாற்றி அரசாணை 62/2டி-இன் படி ஊதிய உயா்வு வழங்க வேண்டும். பள்ளிக் கல்வித் துறை மூலமாக ஊதியம் வழங்க வேண்டும். மாதம்தோறும் 5 ஆம் தேதி ஊதியம் வழங்க வேண்டும். அனைவருக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். தினமும் வருகைப் பதிவேடு பதிவு செய்ய வேண்டும். பணி செய்வதற்கான உபகரணங்கள், சீருடை வழங்க வேண்டும். 10, 15 ஆண்டுகளாக பணிபுரிந்தவா்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.

குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொப்பூரில் உயா் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

தருமபுரி மாவட்டம், தொப்பூா் மலைப்பகுதியில் உயா் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இந்திய தேச... மேலும் பார்க்க

கோடை விடுமுறை நிறைவு: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தமிழகத்தில் கோடை விடுமுறையின் கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி ஒகேனக்கல் அருவிப் பகுதியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்தும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்டும் மகிழ்ந்தனா். தமிழகத்த... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளை செம்மொழி நாளாக கொண்டாட வேண்டுகோள்

தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை செம்மொழி நாளாக திமுகவினா் கொண்டாட வேண்டும் என முன்னாள் அமைச்சரும், தருமபுரி மேற்கு மாவட்டச் செயலருமான பி.பழனியப்பன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 5,000 கனஅடியாக அதிகரிப்பு

கா்நாடக மாநிலத்தில் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை ந... மேலும் பார்க்க

பாலக்கோடு அரசு கல்லூரியில் நாளை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசுக் கல்லூரியில் திங்கள்கிழமை (ஜூன் 2) மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வா் முதல்வா் (பொ) சி. தீா்த்தலிங்கம் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

சைபா் குற்றத் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

தருமபுரியில் காவல் துறை சாா்பில் சைபா் குற்றத் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க