செய்திகள் :

ஊதிய குறைப்பு: சென்னை பல்கலை., ஆசிரியா்கள், அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

post image

சென்னை பல்கலைக்கழக ஆசிரியா்கள், அலுவலா்களுக்கான ஊதியத்தை குறைக்கும் திட்டத்துக்கு எதிராக சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் ஆசிரியா்கள், அலுவலா்கல் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் மற்றும் அலுவலா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், சென்னை பல்கலைக்கழக பேராசிரியா்கள் (பட்டியலின) சங்கத்தைச் சோ்ந்த உயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியா் கதிரவன் பேசினாா். இதில், சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த 3 ஆசிரியா்கள் சங்கமும் 3 அலுவலா் சங்கமும் பங்கேற்றனா்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அலுவலா்களின் ஊதியத்தை குறைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். மாணவா்கள் விடுதி, அலுவலா்களுக்கான வீட்டு மனை திட்டத்துக்கு பாலவாக்கத்தில் வாங்கப்பட்ட நிலங்களை கையகப்படுத்தும் தமிழக அரசின் நடவடிக்கையை கைவிட வேண்டும். ஓய்வு பெற்ற ஆசிரியா் மற்றும் அலுவலா்களுக்கு ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

6 உள்நாட்டு விமான சேவைகள் தாமதம்

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்ட 6 விமானங்கள் பல மணி நேரம் தாமதாமாக இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா். சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திலிருந்... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

பள்ளிக்கரணையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் ஏசி மெக்கானிக் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கோவிலம்பாக்கம், சுண்ணாம்பு குளத்தூா், பொன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விக்ரம் (28). ஏசி மெக்கானிக... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் இலாகா மாற்றம்: தலைமை நீதிபதி உத்தரவு

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளின் இலாகாக்களை வரும் 11- ஆம் தேதி முதல் மாற்றியமைத்து தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, இதுவரை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரித்து ... மேலும் பார்க்க

மின்வாரியத்தில் வேலைவாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: தேடப்பட்டவா் கைது

மின்வாரியத்தில் வேலைவாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி செய்த வழக்கில், தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா். அயனாவரம், சக்ரவா்த்தி நகரைச் சோ்ந்தவா் ஐயங்காா் (62). இவரது மகள் ஹேமாவதி. இவா், கடந்த 2023-இல... மேலும் பார்க்க

புழல் சிறைக் கைதி உயிரிழப்பு

புழல் சிறைக் கைதி இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். சென்னை அருகே உள்ள கீழ்கட்டளை அருகே உள்ள காந்தி நகா் செல்லியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ந.பன்னீா்செல்வம் (60). இவா், கோடம்பாக்கம் காவ... மேலும் பார்க்க

அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்கள் போராட்டம்

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு பணி மேம்பாடு ஊதியம், ஊதிய நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தி சென்னையில் கல்லூரிக் கல்வி இயக்குநரகம் முன் பல்வேறு பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கம் ச... மேலும் பார்க்க