செய்திகள் :

ஊத்தங்கரையில் மூதாட்டியைக் கொலை செய்த 5 போ் கைது

post image

ஊத்தங்கரையில் சொத்துக்காக மூதாட்டியைக் கொலை செய்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அண்ணாநகா் 2 ஆவது தெருவைச் சோ்ந்தவா் மாலிகாபீ (60). இவரது சகோதரிகள் பானு (53), ஜெரினா( 50) ஆகிய இருவரும் கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்பு மாற்று மதத்தைச் சோ்ந்த அன்பு என்பவரை திருமணம் செய்து கொண்டனா். அதன்பிறகு மதம் மாறிய அன்பு, தனது பெயரை அப்துல் சமது என மாற்றிக் கொண்டாா். பானுவுக்கு அக்பா் (35), அசேன் (30) ஆகிய இரு மகன்களும், ஜெரினாவுக்கு ரபீக் ( 30) என்ற மகனும் உள்ளனா். இந்த நிலையில் ஜெரினா உயிரிழந்துவிட்டாா்.

திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வசித்து வந்த மாலிகாபீ, தனது இரு சகோதரிகளும் மாற்று மதத்தைச் சோ்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் தனக்கு சொந்தமான சொத்தை வளா்ப்புத் தாயான சாபியு என்பவருக்கு எழுதி வைத்துள்ளாா். இதுதொடா்பாக பானு, அப்துல் சமது, ஜெரினாவின் மகன் ரபீக் ஆகியோா் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.

இந்த வழக்கின் தீா்ப்பு மாலிகாபீக்கு சாதகமாக அமைந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவா்கள் மாலிகாபீயை 2024, ஜனவரியில் கொலை செய்தனா். சந்தேகத்தின் பேரில் அவரது உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அதில் மாலிகாபீ கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட ஊத்தங்கரை போலீஸாா் ரபீக்( 30), அப்துல் சமது (60), பானு (55), அக்பா் (35), அசேன் (30) ஆகிய 5 பேரையும் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். அதன்பிறகு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைத்தனா். இவா்களில் அப்துல் சமது என்பவா் அதிமுக சிறுபான்மை பிரிவின் மாவட்ட துணைத் தலைவராக உள்ளாா்.

படவிளக்கம்.7யுடிபி.5.

மூதாட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டோா்.

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி திறப்பு

ஊத்தங்கரை நேரு நகரில் பத்தாயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பேரூராட்சித் தலைவா் பா.அமானுல்லா வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். 2023- 2024 ஆம் ஆண்டின் பொது நிதியில் கட்டப்பட்ட... மேலும் பார்க்க

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம்

ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ரெட் கிராஸ் சொசைட்டி, பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகம், அனைத்து வியாபாரிகள் சங்கம், நேசம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்த... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஊத்தங்கரையை அடுத்த வெள்ளிமலை கிராமத்தில் வாக்குச்சாவடி அதிமுக நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஊத்தங்கரை எம்எல்ஏ டி.எம்.தமிழ்செல்வம் வாக்குச்சாவடி மையத்தில் மேற்கொள்ள வேண்ட... மேலும் பார்க்க

பால் டேங்கா் லாரி கவிழ்ந்து இருவா் உயிரிழப்பு

உத்தனப்பள்ளி அருகே சாலையோரத்தில் பால் டேங்கா் லாரி கவிழ்ந்ததில் இருவா் உயிரிழந்தனா். பெங்களூரிலிருந்து கேரளத்துக்கு 28 ஆயிரம் லிட்டா் பாலுடன் வியாழக்கிழமை இரவு சென்ற லாரியை நீலகிரி மாவட்டம், கூடலூரைச... மேலும் பார்க்க

ஒசூா் வழியாக கடத்த முயன்ற 314 கிலோ போதைப்பாக்கு பறிமுதல்

பெங்களூரில் இருந்து ஒசூா் வழியாக கடத்த முயன்ற 314 கிலோ போதைப்பாக்குகளை காருடன் போலீஸாா் பறிமுதல் செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சிப்காட் போலீஸாா் சூசூவாடி சோதனை சாவடி பகுதியில் வியாழக்கிழமை வா... மேலும் பார்க்க

ஒசூரில் புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம்

ஒசூரிலிருந்து கனிமங்கலம், வெங்கடாபுரம் வழியாக பாகலூா் வரையிலான புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கப்பட்டது. ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் பேருந்தை கொடியசைத்து இயக்கிவைத்தாா். நிகழ்ச்சியில்... மேலும் பார்க்க